மாட்டு வண்டியில் மணல் அள்ளும் விவகாரம் – கமலுக்கு செந்தில் பாலாஜி பதிலடி

Published by
பாலா கலியமூர்த்தி

மணல் மாட்டுவண்டி உரிமையாளர்களின் பிரச்சனையின் ஆழம் தெரியாமல் கமல்ஹாசன் பேசுவதாக திமுக வேட்பாளர் செந்தி பாலாஜி குற்றசாட்டியுள்ளார்.

சமீபத்தில் கரூர் தொகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட அத்தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, திமுக வெற்றி பெற்று ஆட்சி வந்தவுடன் அடுத்த நொடியே மாட்டுவண்டி உரிமையாளர்கள் மணல் அள்ளலாம். அதை அதிகாரிகள் யாரும் தடுக்க மாட்டார்கள். அப்படி தடுக்கும் அதிகாரிகள், இங்கே பணியாற்றமாட்டார்கள் என்று அவர் கூறியது சர்ச்சையானது.

பின்னர் செந்தி பாலாஜிக்கு எதிராக அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து செந்தி பாலாஜிக்கு எதிராக ட்விட்டரில் பதிவிட்ட ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன், தேர்தலில் வென்ற மறு நிமிடம் ஆற்று மணல் கொள்ளையைத் துவங்கி விடுவோம் என்கிறார் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி. எங்கள் பெருந்துறை வேட்பாளர் நந்தகுமார் மணல் கொள்ளையை எதிர்த்து நீதிமன்றம் சென்று வாதாடி வென்றவர் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பதில் கருத்து தெரிவித்த செந்தில் பாலாஜி, மணல் மாட்டுவண்டி உரிமையாளர்களின் பிரச்சனையின் ஆழம் தெரியாமல் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசுகிறார். மக்கள் நீதி மய்யத்தில் போட்டியிட கூடிய வேட்பாளர் கரூர் தொகுதியில் மாட்டுவண்டி உரிமையாளர்களுக்கு ஆதரவா? எதிர்ப்பா என்று அவர் தெரியப்படுத்த வேண்டும். நாங்கள் மாட்டுவண்டியில் மணல் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டோம் என்று அந்த வேட்பாளர் சொல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

முதல் பரிசு ரூ.1.5 லட்சம்…நவீன கருவிகளை கண்டுபிடிப்பவர்களுக்கு பட்ஜெட்டில் வந்த குட் நியூஸ்!

முதல் பரிசு ரூ.1.5 லட்சம்…நவீன கருவிகளை கண்டுபிடிப்பவர்களுக்கு பட்ஜெட்டில் வந்த குட் நியூஸ்!

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் நேற்று தமிழக நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ நிதியமைச்சர் தங்கம் தென்னரசு…

24 minutes ago

தமிழக வேளாண் துறையின் சாதனைகள்.., அமைச்சர் கூறிய நீண்ட பட்டியல்….

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் நேற்று தமிழக நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ நிதியமைச்சர் தங்கம்…

29 minutes ago

வலுக்கும் அதிமுக மோதல்? சபாநாயகரை தனியாக சந்தித்த செங்கோட்டையன்!

சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கடந்த இரண்டு நாட்களாகத் தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவுவை சந்தித்துள்ளது…

53 minutes ago

தமிழ் படத்தை இந்தியில் ஏன் டப்பிங் செய்யுறீங்க? பரபரப்பை கிளப்பிய பவன் கல்யாண்..பிரகாஷ் ராஜ் பதிலடி!

ஆந்திரா : தமிழகத்தில் இரு மொழிக்கொள்கை என்பது பெரிய அளவில் பேசுபொருளாகியுள்ள நிலையில், தமிழகத்தின் சேர்ந்த அரசியல் தலைவர்கள் பலரும்…

2 hours ago

TNAgriBudget2025 : வேளாண் பட்ஜெட் தாக்கல்…நேரலை அப்டேட் இதோ!

சென்னை : தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை-2025 வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்து தற்போது…

2 hours ago

ஐபிஎல் 2025 அப்டேட்! யாரெல்லாம் விளையாடமாட்டாங்க தெரியுமா? பும்ரா முதல் சாம்சன் முதல்…

டெல்லி : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. போட்டியில் விளையாட வீரர்கள் தயாராகி…

3 hours ago