கடந்த 2011-2016 அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது பலரிடம் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.2.80 கோடி வரை பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால், செந்தில்பாலாஜி மோசடி செய்ததாக கூறி சென்னையில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம்புகார் அளித்தனர்.
அந்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கரூரில் உள்ள செந்தில்பாலாஜி வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தினர். அப்போது ,ஏராளமான ஆவணங்களை கைப்பற்றப்பட்டது. இதையடுத்து, செந்தில்பாலாஜி உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றார். ஆனால், விசாரணைக்கு தடைவிதிக்க முடியாது,விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று கூறியது.
இந்த வழக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. பின்னர், எம்பி மற்றும் எம்எல்ஏக்களின் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்த மோசடி வழக்கில் இருந்து தன்னை விடுவிக்குமாறு செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பண மோசடி வழக்கில் இருந்து செந்தில் பாலாஜியை விடுவிக்க சிறப்பு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…
சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…
சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…
சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…
டெல்லி : குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 3 நாள் அரசுமுறைப்…