கரூர் மாவட்ட ஆட்சியரை மிரட்டியதாக எழுந்த புகார் தொடர்பான வழக்கில் செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது.
திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் உத்தரவாத மனுதாக்கல் செய்ய வேண்டும் என்று நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்ட ஆட்சியரை மிரட்டியதாக எழுந்த புகார் தொடர்பான வழக்கில் செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது.
கரூர் சிபிஐடி அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என செந்தில் பாலாஜிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், அடையாறு புற்றுநோய் நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் வழங்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் நிபந்தனை வைத்துள்ளது. சமீபத்தில், கரூர் மாவட்ட ஆட்சியர் வெளியில் நடமாட முடியாது என பகிரங்கமாக திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி மிரட்டினார். பின்னர், கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் போலீசில் புகார் அளித்தார்.
இதையடுத்து, திமுக மாவட்ட பொறுப்பாளரும், அரவக்குறிச்சி திமுக எம்எல்ஏவுமான செந்தில் பாலாஜி மீது கொலை மிரட்டல் விடுத்தல், அரசு பணியை செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து ,போலீசார் விசாரித்து வந்த நிலையில், திடீர் மாற்றமாக கரூர் ஆட்சியரை மிரட்டிய புகார் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்த வழக்கில் செந்தில் பாலாஜி உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரியிருந்த நிலையில், தற்போது வழங்கப்பட்டுள்ளது.
குஜராத் : மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி குஜராத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தனது…
துபாய் : துபாயில் நாளை நடைபெறவுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. இந்தியா மற்றும்…
சென்னை : தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தவெக சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு விழிப்புணர்வு பேரணி மற்றும் தமிழக…
சென்னை : பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி, தவெக சார்பில் தமிழ்நாடு…
சென்னை : இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ‘உலக மகளிர் தின விழாவில், சென்னை மாநகரத்தில்…
நாகை : நாகை மாவட்டம் கீழையூர் அருகே கருங்கண்ணி ஊராட்சியைச் சோ்ந்த 26 பேருக்கு முதல்வர் நிகழ்ச்சியின் போது வழங்கப்படுவதாக…