திமுக பொறுப்பாளராக செந்தில் பாலாஜி நியமனம் !!திமுக தலைமை அறிவிப்பு

Default Image

கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளராக செந்தில் பாலாஜி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவில் அதிரடி மாற்றங்கள் ஏற்றப்பட்டது. இதையடுத்து, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த செந்தில்பாலாஜி, அக்கழகத்தின் அமைப்பு செயலாளராக அறிவிக்கப்பட்டார். மேலும், அரசுக்கு எதிராக வாக்களித்த விவகாரத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் செந்தில் பாலாஜியும் ஒருவர் ஆவர்.பின்னர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

Image result for ஸ்டாலின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி

இந்நிலையில் கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளராக செந்தில் பாலாஜி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.நன்னியூர் ராஜேந்திரன் கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் பதவியில் இருந்து விடுவித்து திமுக நெசவாளர் அணி தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இந்த அறிவிப்பை  திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்