Senior Citizen in Vote [File Image]
Election2024 : மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் இன்று வாக்களிக்க பொது போக்குவரத்தை இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய மக்களவைத் தேர்தல் இன்று காலை 7 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 39 தொகுதிகளிலும், புதுச்சேரி தொகுதியிலும் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காலை முதல் காத்திருந்து தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் பல்வேறு வகையில் வாக்காளர்களுக்கான வசதிகளை ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு விழிப்புணர்வு செயல்களிலும் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வந்தது.
தற்போது இந்திய தேர்தல் ஆணையம் நேற்று புதிய அறிவிப்பை அறிவித்து இருந்தது. அதன்படி மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் உடைக்க பலவீனமானவர்கள் இன்று உள்ளூர் பொது போக்குவரத்தை இலவசமாக பயன்படுத்திக் கொள்ள எதுவாக உள்ளூர் பேருந்தில் அவர்களுக்கு இலவச பயண சீட்டு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒருவேளை பேருந்து வசதி அவர்கள் வசிக்கும் இடத்தில் இல்லை என்றாலும், வாக்குச்சாவடிக்கு இலவசமாக அழைத்துச் செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு சக்ஷாம் (Saksham-ECI) எனும் செயலி மூலமும் அல்லது தேர்தல் ஆணையத்தின் 1950 எனும் மாவட்ட தேர்தல் அலுவலக உதவி எண் மூலமாகவோ இந்த வசதிகளை பெற்றுக்கொள்ளலாம் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
இந்த வசதியை மாற்று திறனாளி வாக்காளர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழக தேர்தல் ஆணைய தலைமை அதிகாரி அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.
சென்னை: மாநிலங்களவையில் அம்பேத்கர் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய தினம் நடந்த நாடாளுமன்றத்தில்…
டெல்லி: அம்பேத்கர் பெயர் இப்போது ஒரு பேஷன் ஆகிவிட்டது. அவர் பெயருக்கு பதில் கடவுளின் பெயரை சொல்லி இருந்தால் ஏழு…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக…
பிரிஸ்பேன் : பிரிஸ்பேனில் நடைபெற்று வந்த இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் கவாஸ்கர் தொடரின் 5ஆம் நாள் ஆட்டம் இன்று…
சேலம் : மாவட்டத்தில் முத்துநாயகன்பட்டியில் உள்ள பூட்டப்பட்ட கோயிலை திறப்பதற்கான பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றுள்ளது. அப்போது அங்கிருந்த பெண்கள் பலரும் ஒன்றாக…
சென்னை : இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் முன்னறிவிப்பு இல்லாமல் திடீரென அனைத்துவிதமான இந்திய கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு…