செம்மண் குவாரி வழக்கு – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு தள்ளுபடி!

Published by
பாலா கலியமூர்த்தி

திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில், சாட்சியாக தன்னையும் இணைக்குமாறு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தொடர்ந்த வழக்கை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கடந்த 2006-2011ம் ஆண்டு திமுக, ஆட்சியில் விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த பூத்துறை கிராமத்தில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம், அரசுக்கு ரூ.28.36 கோடி இழப்பு ஏற்பட்டது. எனவே, அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியாக அப்போது கனிம வள அமைச்சராக இருந்த பொன்முடி உட்பட 8 பேர் மீது கடந்த 2012ம் ஆண்டு குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

ஜெயலலிதா நகை விவகாரம் – சிபிஐ நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

இந்த சூழலில் அரசு தரப்பு சாட்சியங்கள் பிறழ் சாட்சியம் அளித்து வருவதால், அரசு வழக்கறிஞர்களுக்கு உதவியாக செயல்பட தன்னையும் வழக்கில் இணைக்க வேண்டும் என கடந்த செப்டம்பர் 8ம் தேதி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முன்பு நடைபெற்ற விசாரணையில், அரசு தரப்புக்கு உதவியாக விசாரணைக்கு தங்களை அனுமதிக்க கோரி ஜெயக்குமார் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.

இதுபோன்று, ஜெயக்குமார் மனுவை தள்ளுபடி செய்யும்படி அரசு தரப்பு வழக்கறிஞர் கார்த்திகேயன் மற்றும் பொன்முடி தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர். அதனைத் தொடர்ந்து, நீதிபதி பூர்ணிமா, வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டார். இந்த நிலையில், செம்மண் குவாரி வழக்கு விசாரணைக்கு வந்தபோது, முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில், சாட்சியாக தன்னையும் இணைக்குமாறு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்தது விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றம்.

Recent Posts

மும்பைக்கு கிடைத்த புது ஹீரோ! யார் இந்த ‘ஆட்ட நாயகன்’ அஸ்வினி குமார்?

மும்பை :  எப்போதுமே திறமையான இளம் வீரர்களை எடுத்து அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களும் வளர்வதற்கு ஒரு காரணத்தை மும்பை…

13 minutes ago

MI vs KKR : சொந்த மண்ணில் கெத்தாக முதல் வெற்றியை ருசித்த மும்பை! கொல்கத்தா படுதோல்வி!

மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடின. டாஸ்…

8 hours ago

MI vs KKR : சொந்த மண்ணில் கொல்கத்தாவை ‘ஆல் அவுட்’ செய்த மும்பை.! 117 தான் டார்கெட்!

மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…

9 hours ago

பாஜக -ஆர்எஸ்எஸ் இடையே என்ன நடக்கிறது? பிரதமர் மோடி ராஜினாமா செய்யபோகிறாரா?

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி நேற்று (மார்ச் 30) நாக்பூர் பயணம் மேற்கொண்டது, இந்த பயணத்தில் ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு…

10 hours ago

இம்ரான் கானுக்கு நோபல் பரிசு? அமைதிக்காக பரிந்துரை செய்த PWA!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சியின் நிறுவனரும், 2018 முதல் 2022 வரை பாகிஸ்தானின் பிரதமராக பதவி வகித்தவருமான…

10 hours ago

மும்பை இந்தியன்ஸ் டீமில் ரோஹித் சர்மா இல்லையா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

மும்பை : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் , கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதி…

11 hours ago