கொரோனவை முழுமையாக கட்டுப்படுத்திய பின் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.
நாடுமுழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால், பள்ளி மற்றும் கல்லூரி தேர்வு ஒத்தி வைக்கப்பட்டும், ரத்து செய்தும் அரசு உத்தரவு பிறப்பித்து வருகிறது.
இதையடுத்து, தமிழகத்தில் பத்தாம் வகுப்புத் தேர்வை ரத்து செய்ய கோரி எதிர்க்கட்சிகள் மற்றும் பல தரப்பினர் கூறி வந்த நிலையில், இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் பத்தாம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்புத்தேர்வு ரத்து செய்வதாகவும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி என அறிவித்தார்.
மேலும்,12-ம் வகுப்புக்கு விடுபட்ட தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அறிவித்தார். இந்நிலையில், கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் எப்போது நடைபெறும் என்று தற்போது கூற இயலாது. கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டும் என்பதுதான் தற்போது அரசின் நோக்கம். கொரோனவை முழுமையாக கட்டுப்படுத்திய பின் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…