இது நடந்தால் கச்சத்தீவு மட்டுமல்ல இந்தியாவே மீட்கப்படும் – செல்வப்பெருந்தகை

Published by
பாலா கலியமூர்த்தி

Election2024: இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் கச்சத்தீவு மட்டுமல்ல இந்தியாவே மீட்கப்படும் என்று செல்வப்பெருந்தகை பேட்டியளித்துள்ளார்.

மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி புதுச்சேரி உள்ளிட்ட 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், விருதுகரில் செய்தியாளர் சந்திப்பில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேசியதாவது, மாநிலங்களின் அதிகாரங்களை மத்திய அரசு பறிக்காமல், சுயாட்சி வழங்க வேண்டும்.

குறிப்பாக நீட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகள் திணிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் தற்கொலைகளில் பாஜக விளையாடி கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் முடிவு கட்டும் விதமாக காங்கிரேசின் வாக்குறுதிகள் வெளியிடப்பட்டது. நீட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகள் குறித்து மாநில அரசுகள் முடிவு செய்து கொள்ளலாம்.

விவசாயிகள், ஏழைகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் பயன் பெறும் வகையில் வரலாற்று சிறப்புமிக்க வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், தமிழ்நாடு காங்கிரேசின் தேர்தல் அறிக்கை வரும் 8ம் தேதி வெளியிட உள்ளோம். இதனால் இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் கச்சத்தீவு மட்டுமல்ல இந்தியாவே மீட்கப்படும்.

ஜனநாயகத்தின் மனசாட்சி தான் இந்தியா கூட்டணி, பாசிச ஆட்சியை அகற்றுவதற்கான கூட்டணி. ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என்று இந்திய மக்கள் மனதில் இருக்கிறது என தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து பேசிய செல்வப்பெருந்தகை தேமுதிக மற்றும் சரத் குமாரை விமர்சித்தார்.

அவர் கூறியதாவது, காமராஜர் பெயரைச் சொல்லி கட்சி ஆரம்பித்த நடிகர் சரத்குமார் காமராஜரை கொலை செய்ய முயன்றவர்களோடு கூட்டு வைத்துள்ளாரே எப்படி? என கேள்வி எழுப்பி விமர்சித்தார். இதுபோன்று, ஒட்டும் இல்லை உறவும் இல்லை என கூறிய மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் ஆன்மா அதிமுகவின் கூட்டணி வைத்துள்ள தேமுதிகவை மனிக்குமா எனவும் கூறினார்.

Recent Posts

காற்று மாசுபாட்டை குறைக்க டெல்லி அரசின் ஐடியா.! வீதி வீதியாய் வரும் வாகனம்…

டெல்லி :  தலைநகர் டெல்லியின் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது காற்று மாசு. கடந்த சில ஆண்டுகளாக இதனை…

5 mins ago

ஐபிஎல் 2025 : கேப்டன் பொறுப்பிலிருந்து வெளியேறுகிறார் ‘ரிஷப் பண்ட்’? காரணம் இதுதான்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறப் போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கான தீவிர…

26 mins ago

துலாபார வழிபாடும் அதன் பலன்களும் ..!

சென்னை -துன்பங்களை துரத்தியடிக்கும் துலாபாரம் கொடுக்கும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். துலாபாரம்…

30 mins ago

ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்.! தவெக தொண்டர்களுக்கு அரசியல் பயிலகம் தொடக்கம்…

சென்னை : சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருந்து தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை…

44 mins ago

கிடு கிடு உயர்வு! 58,000-த்தை நெருங்கும் தங்கம் விலை!

சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சத்தை நாளுக்கு நாள் தொட்டு வருகிறது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ.57…

56 mins ago

பருப்பு விவகாரம்., “பாஜகவின் ஆதாரமற்ற குற்றசாட்டு.!” தமிழக அரசு வெளியிட்ட விளக்க அறிக்கை..,

சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…

1 hour ago