செல்வமுருகன் மரணம் விவகாரத்தில், வீடியோ ஆதாரங்கள் வெளியிட்ட வேல்முருகன்.
விருத்தாசலம் சிறையில் அடைக்கப்பட்ட செல்வமுருகன் மீது பொய்வழக்கு போடப்பட்டதாக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், செல்வமுருகன் நெய்வேலி நகர போலீசாரால், கடந்த 30-ம் தேதி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் விருத்தாசலம் சிறையில் அடைக்கப்பட்ட போது, அங்கு அவருக்கு வெட்டு வந்ததாகவும், அதன் பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். ஆனால், அவர் சிறையில் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டினர்.
இந்நிலையில், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், செல்வமுருகன் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. அவர் வழிப்பறி திருடனல்ல, வளர்ந்து வரும் கிராம தொழிலதிபர். செல்வமுருகன் மீது திட்டமிட்டு திருட்டு வழக்கு பதிவு செய்தது கண்டிக்கத்தக்கது. செல்வமுருகன் விவகாரத்தில் ஆதாரங்கள் இருந்தும், தவறு இழைத்த போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க எடப்பாடி மறுக்கிறார் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், வேல்முருகன், செல்வமுருகன் வழிப்பறி திருடனல்ல என்று நிரூபிக்கும் வகையில், வீடியோ ஆதாரங்களை வெளியிட்டுள்ளார். வியாபாரி செல்வமுருகன் மரணம் தொடர்பாக சிபிசிஐடி காவல்துறையினர் ஏற்கனவே விசாரணை மேற்கொண்டு வருகிற நிலையில், வேல்முருகன் வெளியிட்ட வீடியோ ஆதாரங்களை கைப்பற்றி, மேற்கொண்டு விசாரணை நடத்தப்படும் என சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…