Seeman: அக்டோபர் 10ம் தேதி சீமான் மீண்டும் ஆஜராக உத்தரவு!

Published by
பாலா கலியமூர்த்தி

கடந்த பிப்ரவரி மாதம் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் மேனகா நவநீதனுக்கு ஆதரவாக அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, திருநகர் காலனி பகுதியில் நடந்த நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான், அருந்ததியர் சமூகத்தினர் குறித்து பேசியது சர்ச்சையானது.

இதனை கண்டித்து பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவதூறு பேச்சு தொடர்பாக தலித் அமைப்பினர் அளித்த புகாரை அடுத்து, சீமான் மீது வன்கொடுமை சட்டம் உள்பட 4 பிரிவுகளின் கீழ் கருங்கல் பாளையம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த சமயத்தில் அவதூறு வழக்கு விசாரணைக்காக ஈரோடு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று ஆஜரானார்.

ஆஜராக சம்மன் வழங்கிய நிலையில் ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் சீமான் விசாரணைக்காக இன்று ஆஜரானார். அப்போது, அவதூறு வழக்கில் ஜாமீன் கோரி சீமான் வழக்கறிஞர்கள் மனுதாக்கல் செய்தனர். ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்ததை அடுத்து, சீமான் மீதான அவதூறு வழக்கு விசாரணையை இன்று பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைத்தது ஈரோடு மாவட்ட நீதிமன்றம்.

இந்த நிலையில், பிற்பகல் நடைபெற்ற விசாரணையில், அருந்ததிய சமூக மக்களை இழிவு படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் அக்டோபர் 10-ஆம் தேதி மீண்டும் ஆஜராக ஈரோடு முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. அவதூறு வழக்கில் ஜாமீன் கோரி சீமான் இன்று நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், அக்டோபர் 10ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

வெற்றி யாருக்கு.? மும்பை அணி பௌலிங் தேர்வு.., பேட்டிங் செய்யும் ஹைதராபாத்.!

மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…

12 minutes ago

ரேஸிங்கில் தீவிரம் காட்டும் அஜித் குமார்.! தீவிர பயிற்சி வீடியோ…,

பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…

14 minutes ago

பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!

சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…

1 hour ago

வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. மேலும்,…

2 hours ago

நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் டெல்லி அணியும் ராஜஸ்தான் அணியும்மோதியது . இந்த போட்டி சூப்பர் ஓவர் வரை…

2 hours ago

உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!

டெல்லி :  உச்ச நீதிமன்றம், ஒரு முக்கியமான தீர்ப்பில், குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்கள் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க…

3 hours ago