#Breaking:முதல்வர் ஸ்டாலினை,திடீரென்று சந்தித்த சீமான்,பாரதிராஜா..!

Published by
Edison

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேர் விடுதலை குறித்து முதல்வர் ஸ்டாலினை,திடீரென்று சந்தித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் இயக்குனர் பாரதிராஜா ஆகியோர் பேசியுள்ளனர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன், சாந்தன், நளினி உள்ளிட்ட ஏழு பேரையும் விடுவிக்க வேண்டுமென,முதல்வர் ஸ்டாலின்,குடியரசுத்தலைவருக்கு ஏற்கனவே கடிதம் எழுதியிருந்தார்.

அதில்,”ஏழு பேர் விடுதலை குறித்து தமிழக அரசு கடந்த 9/9/2018 ஆம் ஆண்டு நிறைவேற்றிய தீர்மானத்தை ஏற்று விடுவிக்கவேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,முதல்வர் ஸ்டாலினை,தலைமைச்செயலகத்தில் திடீரென்று சந்தித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் இயக்குனர் பாரதிராஜா ஆகியோர் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் 7 பேர் விடுதலை குறித்து பேசியுள்ளனர்.

இதுகுறித்து,செய்தியாளர்கள் சந்திப்பில் சீமான்,கூறுகையில் ,”தமிழக அரசின் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக உள்ளது. என்று வாழ்த்து தெரிவித்தோம்.பின்னர்,7 பேர் விடுதலை குறித்து பேசியபோது,அவர்கள் சம்மந்தப்பட்ட வழக்கு,உச்சநீதிமன்றத்தில் வரவுள்ளது.எனவே,நீதிமன்ற தீர்ப்பில் என்ன வருகின்றது என்று பார்த்துவிட்டு,நாம் மேற்கொண்டு 7 பேரின் விடுதலை குறித்து முடிவு எடுப்போம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

மேலும்,அவர்களின் விடுதலை தொடர்பான அனுமதிக்கான கையெழுத்து ஆளுநரிடமிருந்து,குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு சென்றுள்ளது.எனினும்,அவர்களின் விடுதலை குறித்து தொடர்ச்சியாக முயற்சி மேற்கொள்வோம்”,என்று முதல்வர் கூறியதாக சீமான் தெரிவித்துள்ளார்.

Published by
Edison

Recent Posts

பதில் சொல்லுங்க., இல்லைனா வேலையை விட்டு போங்க.., அரசு ஊழியர்களிடம் ‘கறார்’ காட்டும் எலான் மஸ்க்!

பதில் சொல்லுங்க., இல்லைனா வேலையை விட்டு போங்க.., அரசு ஊழியர்களிடம் ‘கறார்’ காட்டும் எலான் மஸ்க்!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று எலான் மஸ்கின் தீவிர…

5 minutes ago

தமிழகத்தில் அடுத்தடுத்து பாலியல் பயங்கரம்! 3 வயது குழந்தை முதல்.., குழந்தைக்கு தாய் வரை..,

சென்னை : தமிழகத்தில் சமீபகாலமாக பல்வேறு இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சி…

1 hour ago

LIVE : தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்… 2வது நாளாக தொடரும் மீனவர்கள் போராட்டம் வரை!

சென்னை : முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. 2025-26 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய…

2 hours ago

சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் முயற்சியில் முன்னேற்றம் என்ன? 4வது நாளாக தொடரும் மீட்புப் பணி!

நாகர்கர்னூல் : தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் கடந்த சனிக்கிழமை காலை…

2 hours ago

வங்காள விரிகுடாவில் திடீர் நிலநடுக்கம்… ரிக்டரில் 5.1 ஆக பதிவானதால் மக்கள் அச்சம்!

வங்கதேசம் : வங்காள விரிகுடாவில் இன்று அதிகாலை 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம்…

3 hours ago

சாம்பியன்ஸ் டிராபி: அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா, நியூசிலாந்து! வெளியேறிய பாக், வங்.,அணிகள்.!

துபாய் : வங்கதேச அணிக்கு எதிராக நேற்றைய தினம் நடந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம் அரையிறுதி…

4 hours ago