தமிழக அரசு மீது குரங்கணி தீ விபத்தில் சீமான் சந்தேகம்!

Published by
Venu

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் , குரங்கணியில் தீயைக் அணைக்க அரசு எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை எனவும் நீயூட்ரினோ ஆய்வுக்காக இவர்களே தீயை வைத்திருப்பார்கள் என்று தங்களுக்கு சந்தேகம் எழுவதாக தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மலைப் பாதைகளில் சோதனைச் சாவடி இருக்கும் போது இவர்கள் எப்படி போனார்கள் என்றும் காவலர்கள், வனத்துறை அதிகாரிகள் என்ன செய்தார்கள், குறிப்பாக இவ்வளவு காலம் இல்லாத பெரும் தீ எப்படி உருவானது என கேள்வி எழுப்பினார்.

மேலும் நீயூட்ரினோ ஆய்வின் காரணமாக திட்டமிட்டு இவர்களே கொளுத்தி விட்டார்களா? என்ற சந்தேகம் எழுகிறது. இதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. என்று தெரிவித்த அவர், அனுமதி கேட்காமல் உள்ளே சென்றார்கள் என்று அதிகாரிகள் சொல்வது பொறுப்பற்ற பதில் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

குறிப்பாக இந்த தீ விபத்தைக் வைத்து யாரையும் காட்டிற்குள் விடமாட்டார்கள். இதைக் காரணம் வைத்து யாருக்கும் தெரியாமல் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நீயூட்ரினோ ஆய்வை மேற்கொள்வார்கள் என தெரிவித்த சீமான், பேரிடர் எழும் போது அதில் தற்காத்து கொள்ள அரசு என்ன  நடவடிக்கை எடுக்க முயற்சி செய்திருக்கிறது எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும் ரஜினி போராட மாட்டார், அறிக்கை விடமாட்டார். கமல் சொல்வது போல ரஜினி எல்லா விதத்திலும் நழுவி கொண்டு முதல்வர் ஆகிவிடுவார் என தெரிவித்த அவர், பாராளுமன்ற தேர்தல் வரைக்கும் அரசுக்கு எவ்வித ஆபத்துமில்லை எனவும் அவர் கூறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

2 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

4 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

4 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

4 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

4 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

5 hours ago