நாளை தமிழகம்-கேரளா இடையேயான நதிநீர் பங்கீடு குறித்த இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை!

Default Image

நாளை தமிழகம்-கேரளா இடையேயான நதிநீர் பங்கீடு குறித்த இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

தமிழகம் மற்றும் கேரளா இடையிலான நதி நீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக தமிழக பொதுப்பணித்துறை செயலாளர் மணிவாசகன் தலைமையில் ஒரு குழுவும், கேரள அரசு சார்பில் அம்மாநில நீர்வள ஆதார துறை செயலாளர் தலைமையில் மற்றொரு குழுவும் அமைக்கப்பட்டது. சென்னையில் நடைபெற்ற இந்த குழுவின் முதல் கட்ட பேச்சுவார்த்தையில் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தற்பொழுது இரண்டாம் கட்டமாக நாளை கேரளாவில் தமிழக குழு பங்கேற்கும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. நாளைய பேச்சுவார்த்தையில் ஆனைமலையாறு நல்லாறு அணைத் திட்டம் பாண்டியாறு புன்னம்புழா திட்டத்தில் நீர் பங்கீடு கோவை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யக்கூடிய சிறுவாணி அணை பிரச்னை உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்