இரண்டாம் திருப்புதல் தேர்வு விடைத்தாள் – முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவு!

Published by
பாலா கலியமூர்த்தி

இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வு விடைத்தாள்களை அந்தந்த பள்ளிகளிலேயே மதிப்பீடு செய்ய கல்வித்துறை உத்தரவு.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டு காலத்திற்கு மேலாக பள்ளிகளில் நேரடியாக வகுப்புகளை நடத்த முடியாத சூழ்நிலை இருந்த நிலையில், பிப்ரவரி 1 முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டு, மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றனர்.

பள்ளிகளில் பொதுத் தேர்வுக்கு முன்னதாக 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களை தயார்படுத்தும் வகையில் திருப்புதல் தேர்வு நடைபெறும் என ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. அதன்படி 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜன. 19 முதல் 27ம் தேதி வரையிலும், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜன. 19 முதல் 28ம் தேதி வரையிலும் திருப்புதல் தேர்வு நடைபெற்றது.

மேலும், 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வு வருகிற 28-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற இருக்கிறது. முதற்கட்ட திருப்புதல் தேர்வில் வினாத்தாள் கசிவு ஆன விவகாரம் போல், மீண்டும் எந்த சம்பவமும் நடந்துவிடக் கூடாது என்பதில் பள்ளிக்கல்வித்துறை தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

இந்த நிலையில், 10, 12ம் வகுப்புகளுக்கான இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வு விடைத்தாள்களை அந்தந்த பள்ளிகளிலேயே மதிப்பீடு செய்ய கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. முதல்கட்ட திருப்புதல் தேர்வுகளில் குளறுபடிகள் ஏற்பட்டதன் காரணமாக முதன்மை கல்வி அலுவலர்கள் ஆணையிட்டுள்ளனர்.

ஏதேனும் ஒன்று லீக் ஆனாலும், மற்றொன்றைக் கொண்டு தேர்வு நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 28-ம் தேதி தொடங்க உள்ள 10, 12-ம் வகுப்பு 2-ம் கட்ட திருப்புதல் தேர்வுக்கு 2 வகையான வினாத்தாள்களை தேர்வுத்துறை பயன்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

MI vs LSG: பவுலிங்கில் மிரட்டிய பும்ரா.., திணறிய லக்னோ.! மும்பை அணி அபார வெற்றி.!

MI vs LSG: பவுலிங்கில் மிரட்டிய பும்ரா.., திணறிய லக்னோ.! மும்பை அணி அபார வெற்றி.!

மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…

7 hours ago

”தவெக ஆட்சியில் ஊழல் இருக்காது.,, சிறுவாணி தண்ணீர் போல ஆட்சியை அமைப்போம்” – விஜய்.!

குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…

8 hours ago

“புரட்சி உருவாகிக் கொண்டிருக்கிறது.., தேர்தல் முகவர்கள் சக்தி வாய்ந்தவர்கள்” – ஆதவ் அர்ஜுனா.!

சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…

8 hours ago

கோவையே அதிருது.., “யாரையும் பணம் கொடுத்து கூப்பிடவில்லை” – என்.ஆனந்த்.!

கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…

9 hours ago

MIv s LSG: ரிக்கல்டன் – சூர்யகுமாரின் வெறித்தனமான ஆட்டம்.., மிரண்டு போன லக்னோவுக்கு பெரிய இலக்கு.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…

9 hours ago

“இந்தியாவை தாக்க 130 அணுகுண்டுகள் தயார்” – பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு எச்சரிகை.!

ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…

10 hours ago