7.5% இட ஒதுக்கீட்டில் 11,000 மாணவர்களுக்கு சீட்…ஆனால்,நிபந்தனை – அமைச்சர் பொன்முடி அறிவிப்பு..!

Published by
Edison

அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு படித்திருந்தால் மட்டுமே 7.5 சதவீத இட ஒதுக்கீடு பொருந்தும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளில் கலந்தாய்வுக்கு மதிப்பெண்கள் வெளியிடப்பட்டு, சேர்க்கை விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு,முதற்கட்டமாக பொறியியல் படிப்பிற்கான சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நேற்று முதல் செப்டம்பர் 24-ம் தேதி வரை நடைபெறுகிறது. பொதுப்பிரிவு கலந்தாய்வு செப்டம்பர் 27-ம் தேதி முதல் அக்டோபர் 17-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்நிலையில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளிகளில் பயின்ற 11 ஆயிரம் மாணவர்களுக்கு பொறியியல் படிப்பில் சேர இடம் கிடைக்கும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் கூறியதாவது: “அரசு பள்ளிகளில் படித்தவர்களில் 11 ஆயிரம் பேருக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் பொறியியல் கல்லூரிகளில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது.அதன்படி,பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்த அரசு பள்ளி மாணவர்கள் 22,133 பேரில் 15,660 பேர் தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால்,6 முதல் 12 வரை அரசு பள்ளிகளில் படித்திருந்தால் மட்டுமே 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும்.எனினும்,மாணவர்கள் விருப்பப்பட்ட கல்லூரியில் பயில்வதில்தான் மாற்றம் ஏற்படுமே தவிர, மற்றபடி விண்ணப்பித்த அனைவருக்கும் இடம் கிடைக்கும்.இதற்காக மொத்தம் 51 உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் பலர் விண்ணப்பத்தை சரியாக பூர்த்தி செய்யவில்லை. அரசு பள்ளியில் படித்தது குறித்து விண்ணப்பத்தில் குறிப்பிடாத மாணவர்கள் மீண்டும் தெரிவிக்கலாம்.விடுபட்ட மாணவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கும் பட்சத்தில் கண்டிப்பாக கல்லூரிகளில் இடம் கிடைக்கும்.

மேலும்,தமிழக முதலமைச்சர் சமூக நீதி இட ஒதுக்கீட்டை கண்காணிக்க குழு அமைத்து அறிவித்திருக்கிறார்.எனவே,சமூக நீதி அடிப்படையில் இட ஒதுக்கீடு என்பது முறையாக நடைபெறும்”,என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Recent Posts

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து தினந்தோறும் படுகொலைகள்…அண்ணாமலை ஆவேசம்!

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து தினந்தோறும் படுகொலைகள்…அண்ணாமலை ஆவேசம்!

சென்னை : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று அவரது…

6 hours ago

மங்களகரமா பாட்டுல ஆரம்பிக்கிறோம்! வாடிவாசல் படத்தின் தரமான அப்டேட்!

சென்னை : சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் தனியாக ஒரு படத்தில் நடிக்க எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே அளவுக்கு அவர்…

7 hours ago

சுனிதா வில்லியம்ஸுக்கு பாரத ரத்னா கொடுங்க! முதல்வர் மம்தா பானர்ஜி வேண்டுகோள்!

மேற்கு வங்கம் : ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு பணிகளுக்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி…

8 hours ago

பஞ்சாப் ரொம்ப உக்கிரமா இருப்போம்! எதிரணிக்கு எச்சரிக்கை விட்ட பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்!

பஞ்சாப் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், போட்டியில் விளையாடும் அணிகள்…

9 hours ago

இந்த வருஷம் ஒன்னில்ல.., மொத்தம் 13.! களைகட்டும் ஐபிஎல் திருவிழா!

டெல்லி : இந்த வருட ஐபிஎல் (IPL 2025) திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்…

9 hours ago

வானதி சீனிவாசன் கேட்ட கேள்வி…அண்ணாமலையை சீண்டி பதிலடி கொடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி..!

சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி…

10 hours ago