சோழிங்கநல்லூர் வட்டாட்சியர் , தேனி குரங்கணி தீ விபத்து சம்பவம் தொடர்பாக, பாலவாக்கத்தில் உள்ள சென்னை ட்ரெக்கிங் கிளப் அலுவலகத்தில், ஆய்வு மேற்கொண்டார்.
தேனி குரங்கணி மலைக்கு, ஈரோடு மற்றும் சென்னையைச் சேர்ந்தவர்கள், இரு பிரிவாக பயணித்துள்ளனர். இவர்களில் சென்னையிலிருந்து 27 பேரை, பாலவாக்கத்தில் உள்ள சென்னை ட்ரெக்கிங் கிளப் நிறுவனம் அழைத்துச் சென்றது.
குரங்கணி மலையில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி பலர் உயிரிழந்த நிலையில், சென்னை ட்ரெக்கிங் கிளப் நிறுவனத்தின் உரிமையாளர் பீட்டர் மற்றும் அந்த நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்கள் தப்பியோடி விட்டனர். மேலும், நிறுவனத்தின் பெயர் பலகையும் அகற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து நீலாங்கரை போலீஸார் விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து, சோழிங்கநல்லூர் வட்டாட்சியர் ஏழுமலை, நிறுவனம் அமைந்துள்ள கட்டிடத்தில் ஆய்வு மேற்கொண்டார். அங்கு, ஊழியர்கள் யாரும் இல்லை என்பதை உறுதி செய்த வட்டாட்சியர், பின்னர் அங்கிருந்து சென்றார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…