விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்தில் உள்ள இரு அறைகளும் சீல் வைப்பு.
ஆட்கொணர்வு மனு:
விழுப்புரம் மாவட்டம் குண்டலபுலியூரில் இயங்கி வந்த அன்புஜோதி ஆசிரமத்தில் தங்கியிருந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனநல பாதிக்கப்பட்டவர்களை கொடுமைப்படுத்தியதாகவும், பலரை காணவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில், ஆசிரமம் முறைகேடாக அனுமதியின்றி செயல்பட்டது தெரியவந்தது.
நிர்வாகிகள் கைது:
இதுபோன்று ஆசிரமத்தில் தங்கியிருந்த மனநலம் பாதிக்கப்பட்ட மற்றும் ஊனமுற்றோர்களை கொடுமைப்படுத்தியதும் தெரியவந்தது. ஆசிரம உண்மைகள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்த நிலையில், ஆசிரம நிர்வாகிகள் 8 பேர் மீது 13 பிரிவுகளின் கீழ் கெடார் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
சீல் வைப்பு:
இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் குண்டலபுலியூரில் உள்ள அன்புஜோதி ஆசிரமத்திற்கு மாவட்ட ஆட்சியர் முன்னிலையில், கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் சீல் வைத்தார். விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்தில் உள்ள இரு அறைகளும் சீல் வைக்கப்பட்டது. ஆசிரமத்திலிருந்த பெண்களுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக புகார் எழுந்ததையடுத்து, ஆசிரம நிர்வாகி ஜுபின் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…