அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதுக்கு எதிரான வழக்கில் இன்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு.
அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டதை அகற்றக்கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. கட்சி அலுவலகத்துக்கு சீல் வைத்ததை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர். கடந்த 11-ஆம் தேதி பொதுக்குழுவின் போது கட்சி அலுவலகத்தில் வன்முறை நடந்ததால் வருவாய் கோட்டாட்சியர் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைத்தார்.
இதனிடையே, அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்ட விவகாரத்தில் பொது அமைதி, பள்ளி குழந்தைகள், பொதுமக்கள் பாதுகாப்பு முக்கியமாக கருதப்படுகிறது என்றும் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டதால் சீல் வைக்கப்பட்டது எனவும் காவல்துறை தரப்பில் ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து, அதிமுக தலைமை அலுவலகம் சீல் தொடர்பாக ஓபிஎஸ், இபிஎஸ் ஆகிய இருதரப்பு வாதங்களும் நீதிமன்றத்தில் வைக்கப்பட்டது. எனவே, அதிமுக தலைமை அலுவலகம் சீல் வைக்கப்பட்ட வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், இன்று பிற்பகல் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கிறார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…