அதிமுக அலுவலகத்திற்கு சீல் – இன்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு

Default Image

அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதுக்கு எதிரான வழக்கில் இன்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு.

அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டதை அகற்றக்கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. கட்சி அலுவலகத்துக்கு சீல் வைத்ததை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர். கடந்த 11-ஆம் தேதி பொதுக்குழுவின் போது கட்சி அலுவலகத்தில் வன்முறை நடந்ததால் வருவாய் கோட்டாட்சியர் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைத்தார்.

இதனிடையே, அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்ட விவகாரத்தில் பொது அமைதி, பள்ளி குழந்தைகள், பொதுமக்கள் பாதுகாப்பு முக்கியமாக கருதப்படுகிறது என்றும் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டதால் சீல் வைக்கப்பட்டது எனவும் காவல்துறை தரப்பில் ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, அதிமுக தலைமை அலுவலகம் சீல் தொடர்பாக ஓபிஎஸ், இபிஎஸ் ஆகிய இருதரப்பு வாதங்களும் நீதிமன்றத்தில் வைக்கப்பட்டது. எனவே, அதிமுக தலைமை அலுவலகம் சீல் வைக்கப்பட்ட வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், இன்று பிற்பகல் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்