பணப்பட்டுவாடாவை தடுத்த பாஜக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு…!

Default Image

சென்னை துறைமுகம் பகுதியில், பணப்பட்டுவாடா செய்ததை தடுத்த பாஜக பிராமுகர் சரத் என்பவருக்கு அரிவாள் வெட்டு.

தேர்தல் சமயங்களில் பணப்பாட்டுவாடா செய்வது என்பது  சகஜமான ஒன்றாக மாறிவிட்டது. இதனை தடுக்க தேர்தல் ஆணையம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், சில இடங்களில் மறைமுகமான முறையில் பணப்பட்டுவாடா நடைபெற்று தான் வருகிறது.

அந்த வகையில், சென்னை துறைமுகம் பகுதியில், பணப்பட்டுவாடா செய்ததை தடுத்த பாஜக பிராமுகர் சரத் என்பவரை, 3 பேர் கொண்ட மர்மக்கும்பல், அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடியுள்ளார். இதனால், அவருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சரத் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்