“செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படலாம்” – அமைச்சர் அன்பில் மகேஷ்

Published by
Edison

செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படலாம்  என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.இந்நிலையில்,செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படலாம் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மேலும்,சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இது தொடர்பாக அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

” தனியார் பள்ளிகளில் இருந்து 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் அரசுப் பள்ளிகளை தேடி வந்துள்ளனர்.எனவே,இடைநிற்றல் இல்லாமல் அவர்களை எப்படியெல்லாம் தக்க வைத்து கொள்ள வேண்டும் என்று சிந்தித்து  செயல்பட்டுக் கொண்டு வருகிறோம்.

இந்த கொரோனா காலத்தில் சில பெற்றோர்கள் தாங்கள் செய்யும் வேலைக்கு குழந்தைகளை கூட்டி செல்வதாகவோ, அல்லது வேலைக்கு அனுப்புவதாகவோ தெரியப்பட்டால்,உடனடியாக அதற்கான லேபர் துறையிடம் தெரிவித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்”,என்று தெரிவித்தார்.

இதனையடுத்து திட்டமிட்டப்படி பள்ளிகள் திறக்கப்படுமா? என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர்:

“செப்டம்பர் 1 ஆம் தேதி பள்ளிகள் கண்டிப்பாக திறக்கப்படலாம் என்று முதல்வர் கூறியுள்ளார்.அதற்கு நாங்கள் தயார் நிலையில் உள்ளோம்.1 ஆம் தேதியன்று உள்ள சூழல் பொருத்து,பள்ளிகள் திறக்கப்படும்.

ஏனெனில்,கிட்டத்தட்ட 14 மாநிலங்களில் உள்ள 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெறுகின்றன.சில இடங்களில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கும் ,சில இடங்களில் 12 ஆம் வகுப்புக்கு மட்டும் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளது. அதை கருத்தில் கொண்டு சுழற்சி முறையில் தமிழகத்திலும் பள்ளிகளை தொடங்கலாம்.

அதன்படி,முதல்நாளில் 20 மாணவர்கள்,மறுநாளில் மீதமுள்ள 20 மாணவர்கள் என வகுப்பிற்கு வரவைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.பள்ளிகள் திறப்பதற்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகள் 2 நாட்களில் வெளியிடப்படும்.

இதற்காக ஆசிரியர்கள் தடுப்பூசிகள் போட்டுக் கொண்டுள்ளனர். மேலும், தடுப்பூசி போடாத ஆசிரியர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. மேலும்,நீட் பொறுத்தவரையில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பதுதான் முதல்வரின் கருத்தாக உள்ளது.அதற்காக தான் 5 வருடங்களாக போராடி வருகிறோம்”,என்று தெரிவித்தார்.

Published by
Edison

Recent Posts

சீமான் விவகாரம் : இதுதான் கடைசி? “எனக்கு எந்த நியாயமும் கிடைக்கல.,”  விஜயலட்சுமி பரபரப்பு! 

சீமான் விவகாரம் : இதுதான் கடைசி? “எனக்கு எந்த நியாயமும் கிடைக்கல.,”  விஜயலட்சுமி பரபரப்பு!

சென்னை : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் குற்றசாட்டை முன்வைத்து புகார் அளித்து…

1 hour ago

2026-ல் விஜய் ஆட்சி என்பது பகல் கனவு! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்!

சென்னை : நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கி வருகின்ற 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாக…

2 hours ago

இனிமே உங்களுக்கு கிடையாது! உக்ரைனுக்கான ராணுவ உதவிகளை நிறுத்திய அமெரிக்கா!

அமெரிக்கா : ரஷ்யா -உக்ரைன் போர் என்பது இன்னும் முடிவுக்கு வராத ஒரு போராக இருந்து வருகிறது. இதன் காரணமாக…

4 hours ago

Live : சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி முதல்.., மும்மொழி கொள்கை விவகாரம் வரையில்…

சென்னை : இன்று சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி போட்டி துபாயில் நடைபெறுகிறது. இதில் ரோஹித் சர்மா…

4 hours ago

2011-க்கு பிறகு..? பழிதீர்க்குமா இந்தியா? அசுர பலத்துடன் காத்திருக்கும் ஆஸ்திரேலியா!

துபாய் : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் அரையிறுதி இன்று துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. முதல்…

4 hours ago

“சீக்கிரமா குழந்தைகள் பெத்துக்கோங்க..,” மீண்டும் ‘அதனை’ குறிப்பிட்டு பேசிய முதலமைச்சர்!

நாகை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நாகப்பட்டினத்திற்கு பயணம் மேற்கொண்டிருந்தார். இப்பயணத்தில் நாகை மாவட்டத்தில் முடிவுற்ற திட்டங்கள் தொடங்கி…

6 hours ago