“செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படலாம்” – அமைச்சர் அன்பில் மகேஷ்

Published by
Edison

செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படலாம்  என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.இந்நிலையில்,செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படலாம் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மேலும்,சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இது தொடர்பாக அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

” தனியார் பள்ளிகளில் இருந்து 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் அரசுப் பள்ளிகளை தேடி வந்துள்ளனர்.எனவே,இடைநிற்றல் இல்லாமல் அவர்களை எப்படியெல்லாம் தக்க வைத்து கொள்ள வேண்டும் என்று சிந்தித்து  செயல்பட்டுக் கொண்டு வருகிறோம்.

இந்த கொரோனா காலத்தில் சில பெற்றோர்கள் தாங்கள் செய்யும் வேலைக்கு குழந்தைகளை கூட்டி செல்வதாகவோ, அல்லது வேலைக்கு அனுப்புவதாகவோ தெரியப்பட்டால்,உடனடியாக அதற்கான லேபர் துறையிடம் தெரிவித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்”,என்று தெரிவித்தார்.

இதனையடுத்து திட்டமிட்டப்படி பள்ளிகள் திறக்கப்படுமா? என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர்:

“செப்டம்பர் 1 ஆம் தேதி பள்ளிகள் கண்டிப்பாக திறக்கப்படலாம் என்று முதல்வர் கூறியுள்ளார்.அதற்கு நாங்கள் தயார் நிலையில் உள்ளோம்.1 ஆம் தேதியன்று உள்ள சூழல் பொருத்து,பள்ளிகள் திறக்கப்படும்.

ஏனெனில்,கிட்டத்தட்ட 14 மாநிலங்களில் உள்ள 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெறுகின்றன.சில இடங்களில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கும் ,சில இடங்களில் 12 ஆம் வகுப்புக்கு மட்டும் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளது. அதை கருத்தில் கொண்டு சுழற்சி முறையில் தமிழகத்திலும் பள்ளிகளை தொடங்கலாம்.

அதன்படி,முதல்நாளில் 20 மாணவர்கள்,மறுநாளில் மீதமுள்ள 20 மாணவர்கள் என வகுப்பிற்கு வரவைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.பள்ளிகள் திறப்பதற்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகள் 2 நாட்களில் வெளியிடப்படும்.

இதற்காக ஆசிரியர்கள் தடுப்பூசிகள் போட்டுக் கொண்டுள்ளனர். மேலும், தடுப்பூசி போடாத ஆசிரியர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. மேலும்,நீட் பொறுத்தவரையில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பதுதான் முதல்வரின் கருத்தாக உள்ளது.அதற்காக தான் 5 வருடங்களாக போராடி வருகிறோம்”,என்று தெரிவித்தார்.

Published by
Edison

Recent Posts

தோத்தாலும் போராடிட்ட கண்ணா! ரிஷப் பண்டை பாராட்டிய லக்னோ உரிமையாளர்!

தோத்தாலும் போராடிட்ட கண்ணா! ரிஷப் பண்டை பாராட்டிய லக்னோ உரிமையாளர்!

லக்னோ :  பொதுவாகவே லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா ஒரு போட்டியில் அணி தோல்வி அடைந்தாள் கூட மிகவும்…

12 minutes ago

“இனி கட்சிப் பதவிகளில் ஈடுபட மாட்டார்”…பகுஜன் சமாஜ் கட்சி பதவியில் இருந்து ஆம்ஸ்ட்ராங் மனைவி நீக்கம்!

சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (பிஎஸ்பி) தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி நீக்கப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங்…

1 hour ago

பெண்களின் வரலாற்று விண்வெளி பயணம்! பிரபல பாப் பாடகர் கேட்டி பெர்ரி உட்பட 6 பேர்!

டெக்ஸாஸ் : வரலாற்றில் முதல் முறையாக, பெண்கள் மட்டுமே அடங்கிய ஆறு பேர் கொண்ட குழு, புளூ ஒரிஜின் (Blue…

2 hours ago

Live : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., சர்வதேச அரசியல் நகர்வுகள் வரை…

சென்னை : கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி முதல் நேற்று (ஏப்ரல் 14) வரை 5 நாட்கள் தொடர் விடுமுறையை…

2 hours ago

தமிழ் சினிமாவில் சோகம்! பிரபல இயக்குனர் திடீர் மரணம்!

சென்னை : தனுஷ் நடிப்பில் உருவான புதுக்கோட்டையிலிருந்து சரவணன், ஸ்ரீகாந்த், ஸ்னேகா நடித்த ஏப்ரல் மாதத்தில் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி…

3 hours ago

இனி மீன் விலை தாறுமாறு தான்! நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது மீன்பிடி தடைகாலம்!

சென்னை : திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்டம் வரை தமிழக கடற்கரையோர எல்லை பகுதியில் மீன்களின் இனப்பெருக்க காலத்திற்காக…

3 hours ago