#BREAKING : தொடர் கனமழை- 2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

தொடர் மழை காரணமாக இரண்டு மாவட்டங்களின் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.குறிப்பாக நேற்று இரவு முதல் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் கனமழை காரணமாக இரண்டு மாவட்டங்களின் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக திருச்சி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் சிவராசு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.இதேபோல் அரியலூர் மாவட்ட பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று அம்மாவட்ட ஆட்சியர் ரத்னா தெரிவித்துள்ளார்.