பள்ளிகள் திறப்பு… அக்டோபர் 1ஆம் தேதி முதல்வர் அறிவிப்பு… பள்ளிகல்வி சூசுகம்…

Default Image

பள்ளிகளை திறப்பது குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக்கு பிறகு முதல்வர் அக்.1ம் தேதிக்குள் முறைப்படி அறிவிப்பார் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம்  அருகே உள்ள சிறுவலூரில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், நிருபர்களிடம் கூறியதாவது,  பள்ளிகள் திறப்பு மற்றும்  மாணவர்கள் சேர்க்கை தேதியை  நீடிப்பது  குறித்து அனைத்து துறையினருடனான  ஆலோசனைக்கு பிறகு விரைவில் முடிவு செய்யப்படும் என்றும். மேலும், தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை, வருவாய்த்துறை, பள்ளி கல்வித்துறையினருடன் தமிழக முதல்வர் ஆலோசனை நடத்தி வரும் அக்டோபர் 1ஆம் தேதிக்கு முன்னர் அறிவிப்பார் என்றார். மேலும்,  55 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறைதான் கூற வேண்டும் என்று பள்ளிகல்வித்துறை அமைச்சர் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்