மாணவிக்கு பாலியல் வன்கொடுமை., போலி NCC முகாம்கள்., மாவட்ட ஆட்சியர் விளக்கம்.!

Published by
மணிகண்டன்

கிருஷ்ணகிரி : பள்ளி மாணவிக்குப் போலி NCC முகாமில் நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்த விசாரணை விவரங்களை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு செய்தியாளர்களிடம் கூறினார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார்ப் பள்ளி ஒன்றில் அண்மையில் நடைபெற்ற போலியான என்சிசி முகாமில் சுமார் 17 பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த முகாமில் கலந்து கலந்து கொண்ட 13 வயது பள்ளி மாணவிக்கு போலி என்சிசி பயிற்சியாளரால் பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது.

இந்த பாலியல் வன்கொடுமை புகாரின் பெயரில் போக்ஸோ பிரிவில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இதுவரையில் 10க்கும் மேற்பட்டோரைக் கைது செய்துள்ளனர். இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி சிவராமனை நேற்று நள்ளிரவில் கிருஷ்ணகிரி காவல்துறையினர் கைது செய்தனர்.

NCC விளக்கம் :

பாலியல் வன்கொடுமை நடைபெற்றதாகக் கூறப்படும் பள்ளியில் NCC சார்பாக எந்த முகாமும் நடைபெறவில்லை என்று NCC தலைமை தற்போது விளக்கம் அளித்துள்ளது. குறிப்பிட்ட நாளில் எந்தவித NCC முகாமும் கிருஷ்ணகிரியில் நடைபெறவில்லை. இந்த பாலியல் வன்கொடுமை நிகழ்வுக்கும் NCCக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று NCC தலைமை விளக்கம் அளித்துள்ளது.

ஆட்சியர் செய்தியாளர் சந்திப்பு :

பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட  ஆட்சியர் கே.எம்.சரயு செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளார். அதில், ” தற்போது விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. புகார் வந்ததும் நடவடிக்கை எடுத்துள்ளோம். இந்த புகாரை மறைக்க முயன்ற நபர்களையும் நாங்கள் கைது செய்துள்ளோம். போக்ஸோ பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நேற்றுவரை 9 பேர் கைதாகினர். இன்று முக்கிய குற்றவாளி (சிவராமன்) உட்பட 3 பேர் கைதாகி உள்ளனர்.

இவர்கள் போலியான சான்றிதழ் கொண்டு NCC முகாம்கள் நடத்தி வந்துள்ளனர். இவர்கள் எந்தெந்த பள்ளிகளில் முகாம்கள் நடத்தி உள்ளனர் என விசாரணை செய்து வருகிறோம். சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் அந்த போலி NCC நபர்களைப் பின்புலம் பரிசோதிக்காமல் முகாம் நடத்த அனுமதித்துள்ளனர். பள்ளிக்கல்வித்துறையால் கூறப்பட்டுள்ள எந்த விதிகளையும் பள்ளி நிர்வாகம் முறையாகப் பின்பற்றவில்லை.

இதே முகாமில் கலந்து கொண்ட மற்ற மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்களிடமும் நாங்கள் விசாரணை செய்து வருகிறோம். இம்மாதிரியான சம்பவங்கள் நேர்ந்தால் உடனடியாக அரசு உதவி எண் 1098 என்ற எண்ணை உடனடியாக அழைக்க வேண்டும்.” என்று மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறினார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

பாகிஸ்தான் அதிகாரியின் ‘கழுத்தறுப்பு’ சைகையால் வெடித்த சர்ச்சை! வைரலாகும் வீடியோ…

லண்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…

40 minutes ago

திறந்தவெளி வாகனத்தில் விஜய்., ஸ்தம்பித்த கோவை விமான நிலையம்!

கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் அக்கட்சி பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொள்ளும்…

1 hour ago

Live : தவெக பூத் கமிட்டி மாநாடு முதல்… இந்தியா – பாகிஸ்தான் எல்லை பதற்றம் வரை…

சென்னை : இன்றும் நாளையும் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில்…

2 hours ago

நள்ளிரவில் எல்லை மீறிய பாகிஸ்தான்! பதிலடி கொடுத்த இந்திய ராணுவம்!

டெல்லி : பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இரு…

2 hours ago

தவெக பூத் கமிட்டி மாநாடு : எங்கு எப்போது? விஜய் வருகை., முக்கிய விவரங்கள் இதோ…

சென்னை : 2026 தமிழக சட்டப்பேரவையை குறிவைத்து தமிழக அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. முதல் முறையாக…

3 hours ago

CSK மேட்சுக்கு AK பேமிலி விசிட்! வைரலாகும் அஜித்குமார் வீடியோஸ்!

சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…

13 hours ago