குழந்தை திருமணம், பாலியல் விழிப்புணர்வு ஏற்படுத்த ஆசிரியைகளை பொறுப்பாளராக நியமிக்க பள்ளிக்கல்வி துறை உத்தரவு…!

Default Image

மாணவிகளுக்கு குழந்தை திருமணம், பாலியல் விழிப்புணர்வு ஏற்படுத்த ஆசிரியைகளை பொறுப்பாளராக நியமிக்க பள்ளிக்கல்வி துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இன்று சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பெண்கள் பலரும் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகின்றனர். இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், ஏதோ ஒரு இடத்தில் குழந்தைகளுக்கான வன்கொடுமைகள் அரங்கேறிய வண்ணம் தான் உள்ளது.

இந்நிலையில், மாணவிகளுக்கு குழந்தை திருமணம், பாலியல் விழிப்புணர்வு ஏற்படுத்த ஆசிரியைகளை பொறுப்பாளராக நியமிக்க பள்ளிக்கல்வி துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவின்படி, 8-ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு ஆசிரியைகளை பொறுப்பாக நியமிக்க வேண்டுமென்றும், தலா 10 மாணவிகளுக்கு ஒரு ஆசிரியை என பொறுப்பாளரை நியமித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும், ஆசிரியர்களை பொறுப்பாளராக நியமிக்க கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்