முக்கிய அறிவிப்பு…மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை – வருமான வரம்பை உயர்த்தி அரசாணை வெளியீடு!

Published by
Edison

கிராமப்புறங்களில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்ட சில வகுப்புகளை சேர்ந்த மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் பொருட்டு அவர்களின் பெற்றோர்களது ஆண்டு வருமான உச்ச வரம்பினை 1 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர்,மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலனைச் சேர்ந்த 3 ஆம் வகுப்பு முதல் 6 ஆம் வகுப்பு வரை கிராமப்புறங்களில் கல்வி பயிலும் மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் பொருட்டு அவர்களின் பெற்றோர்களது ஆண்டு வருமான உச்ச வரம்பினை ரூ.72,000/- லிருந்து ரூ.1,00,000/- ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

முன்னதாக நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறையின் 2021-2022 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் “கிராமப்புறத்தைச் சார்ந்த பொருளாதாரத்தில் பின் தங்கிய மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவியர் அதிக எண்ணிக்கையில் பயனடையும் வகையில், கிராமப்புற மாணவியருக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற நிர்ணயிக்கப்பட்டுள்ள பெற்றோரது ஆண்டு வருமான உச்ச வரம்பு 72 ஆயிரம் ரூபாயிலிருந்து இலட்சம் 1 ரூபாயாக உயர்த்தப்படும்”என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்நிலையில்,இதுதொடர்பான தற்போதைய மானியக் கோரிக்கை அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக பெறப்பட்ட மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல ஆணையரின் கருத்துருவில், கிராமப்புற பெண்கல்வி ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் பயன்பெற 3 ஆம் வகுப்பு முதல் 6 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமான உச்ச வரம்பினை ரூ.72,000/- லிருந்து ரூ1,00,000/- ஆக உயர்த்தி ஆணை வெளியிடப்படுகிறது”,என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent Posts

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

25 mins ago

தக் லைஃப் படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா?

சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…

38 mins ago

“விஜயகாந்த்துக்கு மரியாதை செலுத்தும் கிரிக்கெட் படம்” லப்பர் பந்து இயக்குநர்.!

சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…

1 hour ago

லட்டு விவகாரம் : “இதை வைத்து மத அரசியல் செய்கின்றனர்”! ஜெகன் மோகன் ரெட்டி பரபரப்பு பேட்டி !

ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…

1 hour ago

பிரியங்கா – மணிமேகலை விவகாரம் : விதிகளை மீறியதால் வழக்கு தொடர போகும் விஜய் டிவி?

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…

1 hour ago

“ரூ.320க்கு எப்படி சுத்தமான பசு நெய் கிடைக்கும்.? ” புலம்பும் திருப்பதி தேவஸ்தானம்.!

ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…

2 hours ago