[file image]
மின் கட்டணம் கட்டாததால் மின் இணைப்பு துண்டிக்கப்படுவதாக குறுஞ்செய்தி வந்தால் கவனமாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சமீபத்தில், தமிழகத்தில் மின் கட்டணம் கட்டவில்லை என்றும் மின் இணைப்புத் துண்டிக்கப்படும் எனவும் குறுஞ்செய்தி அனுப்பி, அதில் லிங்கை க்ளிக் செய்ய வைத்து மக்களிடையே மோசடி செய்யும் சம்பவங்கள் தற்போது அதிகரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மின் கட்டணம் கட்டாததால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்ற குறுஞ்செய்தி போலியானது என தமிழக மின்சார வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மின்சார வாரியம் எச்சரிக்கையில், மின் கட்டணம் கட்டாததால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்ற குறுஞ்செய்தி வந்தால் பதட்டம் அடைய வேண்டாம். உங்களின் மின் கட்டணம் ரசீதின் நிலைப்பாடு சரி பார்க்க வேண்டும்.
உற்பத்தி மற்றும் சேவை துறையில் தமிழகம் உலக அளவில் சிறந்து விளங்கி வருகிறது – முதல்வர் மு.க.ஸ்டாலின்
மின் கட்டணம் கட்டாததால் மின் இணைப்பு துண்டிக்கப்படுவதாக குறுஞ்செய்தி வந்தால் குறுஞ்செய்தி வந்தால் கவனமாக இருக்க வேண்டும். குறுஞ்செய்தி வரும் எண்ணை தொடர்பு கொள்ள வேண்டாம். இதுபோன்று, இணைய லிங்கக்கை கிளிக் செய்ய வேண்டாம். குறுஞ்செய்தி வந்தால் உடனடியாக 1930-ஐ அழைத்து புகார் அளிக்க வேண்டும். உறவினர்கள், நண்பர்களுக்கு தகவலை பகிர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இதுபோன்று ஒரு மோசடி மெசேஜ் பலருக்கும் அனுப்பப்பட்டு, அவர்களது வங்கிக் கணக்கிலிருந்து பணம் மோசடி செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். எனவே, மின் கட்டணம் கட்டாததால் மின் இணைப்பு துண்டிக்கப்படுவதாக குறுஞ்செய்தி வந்தால் http://cybercrime.gov.in என்ற இணையதளம் வாயிலாகவும், @tncybercrimeoff என்ற எக்ஸ் பக்கத்திலும் புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : கடந்த மார்ச் 6 முதல் 8 வரை, மத்திய அமலாக்கத்துறை (ED) டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் திடீர்…
டெல்லி : இந்திய அரசு, நாடு முழுவதும் உள்ள மொபைல் போன்களில் பயன்படுத்தப்படும் பழைய சிம் கார்டுகளை மாற்றுவது பற்றி…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், லக்னோ…
சென்னை : மானிய கோரிக்கைகள் தொடர்பான விவாதத்திற்கு தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. போக்குவரத்து துறை சார்பான கோரிக்கைகளுக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஆர்சிபி அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.…