எஸ்.பி.பி அவர்களை சந்திக்க மனைவி சாவித்ரி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளனர்.
தமிழ் திரை உலகின் பிரபலமான பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியன் அவர்கள் கடந்த ஒரு மாத காலமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையிலுள்ள எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பதாக எஸ்பிபியின் உடல்நிலை தேறி வருவதாகவும் விரைவில் அவர் பூரண சுகமடைந்து வீடு திரும்புவார் எனவும், மருத்துவமனை நிர்வாகம் மற்றும் குடும்பத்தினரால் கூறப்பட்டதால் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் மகிழ்ச்சி உண்டாகியது.
இந்நிலையில் தற்போது எஸ் பி பி யின் உடல் நிலையில் திடீரென மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் நேற்று தகவல் அளித்ததை தொடர்ந்து எஸ்பிபி அவர்களின் குடும்பத்தினரை மருத்துவமனைக்கு வருமாறு கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்கள் சிகிச்சை பெற்று வரக்கூடிய மருத்துவமனையில் அவரது மனைவி சாவித்திரி, மகன் சரண் மற்றும் மகள் பல்லவி ஆகியோர் தற்பொழுது வருகை தந்துள்ளனர்.
சத்தீஸ்கர் : நடந்து முடிந்த சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 கிரிக்கெட் தொடர், ஓய்வு பெற்ற கிரிக்கெட் ஜாம்பவான்களை மீண்டும்…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க விஞ்ஞானி லெக்ஸ் பிரிட்மெனின் பாட்காஸ்டர் லெக்ஸ் ஃப்ரிட்மேனுடனான நேர்காணலில், "இந்தியாவா? பாகிஸ்தானா?…
சென்னை : தமிழ்நாடு அரசின் பொது நிதிநிலை அறிக்கை கடந்த 14-ஆம் தேதியும், வேளாண்மைக்கான நிதிநிலை அறிக்கையை 15-ஆம் தேதியும் தாக்கல்…
சென்னை : தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது. தமிழ்நாடு அரசின் பொது…
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…