எஸ்.பி.பி மனைவி சாவித்ரி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மருத்துவமனைக்கு வருகை!

Published by
Rebekal

எஸ்.பி.பி அவர்களை சந்திக்க மனைவி சாவித்ரி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளனர்.

தமிழ் திரை உலகின் பிரபலமான பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியன் அவர்கள் கடந்த ஒரு மாத காலமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையிலுள்ள எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பதாக எஸ்பிபியின் உடல்நிலை தேறி வருவதாகவும் விரைவில் அவர் பூரண சுகமடைந்து வீடு திரும்புவார் எனவும், மருத்துவமனை நிர்வாகம் மற்றும் குடும்பத்தினரால் கூறப்பட்டதால் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் மகிழ்ச்சி உண்டாகியது.

இந்நிலையில் தற்போது எஸ் பி பி யின் உடல் நிலையில் திடீரென மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் நேற்று தகவல் அளித்ததை தொடர்ந்து எஸ்பிபி அவர்களின் குடும்பத்தினரை மருத்துவமனைக்கு வருமாறு கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்கள் சிகிச்சை பெற்று வரக்கூடிய மருத்துவமனையில் அவரது மனைவி சாவித்திரி, மகன் சரண் மற்றும் மகள் பல்லவி ஆகியோர் தற்பொழுது வருகை தந்துள்ளனர்.

Published by
Rebekal

Recent Posts

மழைக்கு வாய்ப்பு உண்டா? ‘அடுத்த 6 நாட்களுக்கு இதுதான் நிலைமை ‘ – வானிலை மையம் அப்டேட்.!

மழைக்கு வாய்ப்பு உண்டா? ‘அடுத்த 6 நாட்களுக்கு இதுதான் நிலைமை ‘ – வானிலை மையம் அப்டேட்.!

சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் இன்று (மார்ச்.17)…

11 minutes ago

பாஜக போராட்டத்திற்கு விசிக வரவேற்பு! திருமாவளவன் பரபரப்பு பேட்டி!

சென்னை : டாஸ்மாக் டெண்டர் விவகாரத்தில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரையில் முறைகேடு நடைபெற்று இருக்கலாம் எனக் அமலாக்கத்துறை…

59 minutes ago

சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அதிமுகவின் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் கேள்வி பதிலுக்காக கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.…

1 hour ago

முதல் குற்றவாளி மு.க.ஸ்டாலின், 2ஆம் குற்றவாளி செந்தில் பாலாஜி! அண்ணாமலை பரபரப்பு பேட்டி!

சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில்…

2 hours ago

வார தொடக்கத்தில் குறைந்த தங்கம் விலை…. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வார தொடக்க நாளான இன்று (மார்ச் 17) சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது.…

2 hours ago

டாஸ்மாக் முறைகேட்டை கண்டித்து போராட்டம்: பாஜக தலைவர் அண்ணாமலை கைது.!

சென்னை : அண்மையில் அமலாக்கத்துறையினர் சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகள் என பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர்.…

2 hours ago