மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பி உடலுக்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மலர் வளையம் வைத்து  மரியாதை…

Default Image

மறைந்த பின்னணி பாடகர் ,நடிகர், தயாரிப்பாளர் என பன்முக திறமைக்கொண்டவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பூவுலகமே மெய்மறக்க வைக்கும் குரல் இன்று மவுனமாகி தன் பயணத்தை பூவுலகில் முடித்து விண்ணுலகம் சென்றது.

இந்நிலையில் அவரது உடல், நேற்று மாலை  நுங்கம்பாக்கம் இல்லத்தில், பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இந்நிலையில் எஸ்.பி.பி.,யின் உடல், நேற்று இரவு, திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பாக்கத்தில் உள்ள, அவரது பண்ணை வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.இன்று காலை, 11:௦௦ மணிக்கு, பண்ணை வீட்டின் ஒரு பகுதியில், அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், எஸ்.பி.பி உடலுக்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி மலர் வளையம் வைத்து  மரியாதை செய்துள்ளார். மேலும்,  பண்ணை வீட்டில் வைக்கப்பட்டுள்ள எஸ்.பி.பி-யின் உடலுக்கு அஞ்சலி செலுத்த பொதுமக்களும் திரண்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்