நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பணியிட மாற்றம் புதிய ஆட்சியராக எஸ்.பி.அம்ரித் நியமனம்.
நீலகிரி மாவட்ட ஆட்சியராக கடந்த 2017-ம் ஆண்டு இன்னசென்ட் திவ்யா பொறுப்பேற்றார். இவர் பொறுபேற்ற பிறகு பொதுமக்களிடையே அவரது பணிக்கு வரவேற்பு கிடைத்தது. இதற்கிடையில் கடந்த 2019-ஆம் ஆண்டு இன்னசென்ட் திவ்யாவை இடமாற்றம் செய்யும் பணிகள் நடைபெற்றது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்ற அனுமதியில்லாமல் அவரை இடமாற்றம் செய்யக் கூடாது என நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த வழக்கில் இடைக்கால மனு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்தது.
அதில், நிர்வாகரீதியிலான பணிகளை மேற்கொள்ள இன்னசென்ட் திவ்யாவை இடமாற்றம் செய்வது அவசியமாகிறது என தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, இன்னசென்ட் திவ்யாவை பணியிட மாற்றம் செய்ய உச்சநீதிமன்றம் கடந்த 16-ஆம் தேதி அனுமதி வழங்கியது. இந்நிலையில், நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பணியிட மாற்றம் புதிய ஆட்சியராக எஸ்.பி.அம்ரித் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை : இன்று இந்து கடவுள் முருகனுக்கு உகந்த பண்டிகைகளில் ஒன்றான தைப்பூச திருவிழா முருகனின் அறுபடை வீடுகள் மட்டுமன்றி…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி, நான்கு நாள் அரசு முறை பயணமாக இன்று டெல்லியில் இருந்து பிரான்ஸ் மற்றும்…
சென்னை : தமிழகம் வெற்றிக் கழகம் கட்சி ஆரம்பித்து தற்போது வரையில் அக்கட்சி நிர்வாகத்திற்கு 120 மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்…
சென்னை : இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'ட்ராகன்' படத்தின் டிரெய்லர் வெளியானது. இப்படத்தில் கயாடு…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பு பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் தொடர் இப்பொது பரபரப்பான கட்டத்தில் உள்ளது.…
ஒடிசா : இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டியின் போ, ஏற்பட்ட ஃப்ளட்லைட் பிரச்சனை தொடர்பாக ஒடிசா அரசு…