தொகுதி மக்களை கொரோனாவில் இருந்து காப்பாற்றுக- கமல் ட்விட்..!

Default Image

அவரவர் தொகுதி மக்களை கொரோனாவிலிருந்து காப்பதை முழுமுதற் கடமையாகக் கருதி செயலாற்றும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என கமல் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. கடந்த 7ஆம் தேதி ஆளுநர் முன்னிலையில் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றுக்கொண்டார். இந்நிலையில்,16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது.

இந்த முதல் கூட்டத்தொடரில் தேர்தலில் வெற்றிபெற்ற 234 சட்டமன்ற உறுப்பினர்கள்  பதவி ஏற்றுக் கொள்கின்றனர். இவர்களுக்கு பதவியேற்று வைக்க தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றதை தொடர்ந்து அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அகர வரிசைப்படி பதவியேற்ற வருகின்றனர்.

இந்நிலையில், நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது ட்விட்டரில் இன்று சட்டமன்ற உறுப்பினர்களாகப் பதவி ஏற்றுக் கொள்ளும் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அவரவர் தொகுதி மக்களை கொரோனாவிலிருந்து காப்பதை முழுமுதற் கடமையாகக் கருதி செயலாற்றும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்