சாவர்க்கர், கோட்சே வழியில் வந்தவர்களுக்கு நாங்கள் சற்றும் சளைத்தவர்கள் அல்ல – சபாநாயகர் அப்பாவு

Published by
பாலா கலியமூர்த்தி

நடப்பாண்டுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் தமிழக ஆளுநர் ஆர்என் ரவி பங்கேற்று, அரசு தயாரித்த உரையை முழுமையாக படிக்காமல் புறக்கணித்தார். சென்ற ஆண்டு உரையின்போது சில வார்த்தைகளை புறக்கணித்த நிலையில், இம்முறை அரசின் உரையை முழுமையாக படிக்காமல் ஓரிரு நிமிடத்தில் முடித்துவிட்டு வெளியேறினார்.

இதன்பின் அரசு தயாரித்த உரையை சபாநாயகர் அப்பாவு சட்டப்பேரவையில் வாசித்தார். அதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அயராத உழைப்பால் அனைத்து துறைகளில் தமிழ்நாடு அரசு முன்னேறி வருகிறது. 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் தமிழ்நாடு அரசு ஈர்த்துள்ளது. தமிழ்நாட்டின் பண வீக்கம் 5.97ஆக உள்ளது. தமிழ்நாடு அரசு பணவீக்கத்தை கட்டுப்படுவதில் சிறப்பாக செயல்பட்டுள்ளது.

கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு அணி 2ம் இடம் பிடித்துள்ளது. கணியன் பூங்குன்றனார், வரிகளான ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ வரிகள் தான் தமிழ்நாடு அரசை வழிநடத்துகிறது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஒருபோதும் தமிழ்நாடு அரசு அனுமதிக்காது. மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதி வாரி கணக்கெடுப்பாக மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.

தமிழ்நாடு சட்டப்பேரவை.. உரையை புறக்கணித்தார் ஆளுநர்!

நதி நீர் பங்கீடு பிரச்னையில் விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு துணை நிற்கும். தமிழ்நாடு மீனவர்களின் நலன் மற்றும் சிறை பிடிக்கபடுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மத்திய அரசுக்கு வலியுறுத்துவோம் என்றும் தமிழ்நாட்டு மக்களுக்காக அர்ப்பணிப்புடன் தமிழ்நாடு செயலாற்றி வருகிறோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு தயார் செய்துள்ள உரையில், அரசின் திட்டங்கள் குறித்த தகவல்கள் இடம்பெற்றிருந்தது.

இதன்பின் சபாநாயகர் கூறியதாவது, தொடக்கத்தில் தமிழ்தாய் வாழ்த்து, நிறைவில் தேசிய கீதம் இதுதான் மரபு. சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசிய குறிப்புகள் அவைக் குறிப்பில் இடம்பெறாது. சாவர்க்கர் , கோட்சே வழியில் வந்தவர்களுக்கு நாங்கள் சற்றும் சளைத்தவர்கள் அல்ல என்றார். மேலும், ஆளுநர் உரையை படிக்காமல் புறக்கணித்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

1 hour ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…

1 hour ago

“சுயமரியாதை முக்கியம்…கடவுளுக்கு மட்டும் தலைவணங்குங்கள்”…மணிமேகலை அட்வைஸ்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…

1 hour ago

இன்னும் 10 நாளில் உதயநிதி துணை முதல்வர்.! அமைச்சர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…

2 hours ago

அக்டோபர் 27இல் த.வெ.க மாநாடு.! விஜய் அறிவிப்பு.!

சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…

2 hours ago

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

17 hours ago