சவுகார்பேட்டை துப்பாக்கிசூடு.. தலில் சந்த் உறவினர் தற்கொலை..!

Published by
murugan

சென்னை சவுகார்பேட்டையில் மூன்று பேர் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் தொடர்பாக இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் முக்கிய குற்றவாளியான ஜெயமாலா கைது செய்யப்பட்டுள்ளார். ஜெயமாலா நடத்திய விசாரணையில் பல தகவல்களை தெரிவித்தார். அதில், தனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுக்கப்பட்டதாகவும், இதுகுறித்து தனது சகோதரரிடம் தெரிவித்ததாகவும் கூறினார்.

அந்த ஆத்திரத்தில் தான் இந்த கொலை சம்பவத்தை நடத்தியதாக ஜெயமாலா கூறினார். எனவே இந்த பாலியல் தொல்லை தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்த முடிவு செய்தனர். அதன் தொடர்ச்சியாக தலில் சகோதர மகனான விஜயகுமாரை ஆர்.கே நகர் போலீசார் விசாரணைக்கு அழைத்தனர். ஆனால் விஜயகுமார் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

இந்நிலையில், இன்று காலை விஜயகுமார் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். விஜயகுமார் தற்கொலை செய்து கொள்வதற்கு வீடியோ ஒன்று வெளியிட்ட தனது உறவினருக்கு வாட்சப் மூலம் அனுப்பியுள்ளார். அதில் காவல்துறை தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.

ஜெயமாலா தனக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாக்குமூலத்தில் விஜயகுமாரின் பெயரும் இருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனால், முதற்கட்ட  விசாரணைக்காக தான் விஜயகுமாரை அழைத்ததாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலில் சந்த், ஜெயமாலா மாமனார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

வசூல் வேட்டையில் ‘GOAT’ ! 13 நாட்களில் இத்தனை கோடியா?

வசூல் வேட்டையில் ‘GOAT’ ! 13 நாட்களில் இத்தனை கோடியா?

சென்னை :வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த செப்-5ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையருங்குகளில் வெளியான GOAT திரைப்படம்…

12 hours ago

ஜானி மாஸ்டர் மீது பாய்ந்தது போக்சோ வழக்கு.! விரைவில் கைது?

ஹைதராபாத் : முன்னணி நடன இயக்குநர் ஜானி மீது 21 வயது இளம் பெண் ஐதராபாத் போலீசில் பாலியல் பலாத்கார புகார்…

12 hours ago

அனல் பறக்கும் பிரியங்கா பிரச்சனை…மணிமேகலை போட்ட கெத்து பதிவு?

சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு இடையே  நடந்த ஆங்கரிங் பிரச்சனை பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில்,…

13 hours ago

தனுஷ் விவகாரம்: ஃபெப்சி செயலுக்கு நடிகர் சங்கம் அழுத்தமான கண்டனம்.!

சென்னை : தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்கிற (ஃபெப்சி) அமைப்பின் சார்பில், அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று நிருபர்களுக்கு…

13 hours ago

‘பத்து நிமிஷத்துல பஞ்சு போன்ற அப்பம்’: ட்ரை பண்ணி பாருங்க!

சென்னை- வீட்டில் இருக்கும் கொஞ்ச பொருட்களை வைத்து சட்டென ஒரு ஸ்நாக்ஸ் ரெடி பண்ணனுமா ?அப்போ இந்த பஞ்சு போன்ற…

13 hours ago

ஐபிஎல் 2025 : “பஞ்சாப் அணிக்கு அடித்த ஜாக்பாட்”! பயிற்சியாளராக இணைந்தார் ரிக்கி பாண்டிங்!

சென்னை : ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக விலகிய பிறகு தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப்…

14 hours ago