தமிழ்நாட்டில் ஒரு தொகுதியை தவிர மற்ற தொகுதிகளில் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் தேர்தல் நடைபெற்றது! – தலைமை தேர்தல் அதிகாரி தகவல்!
தமிழ்நாட்டில் இன்று சூலூர், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல் எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் நடைபெற்றதாக, தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரகாஷ் சாஹு தெரிவித்தார். மேலும் அரவக்குறிச்சியில் மட்டும் சிறிது பதட்டம் ஏற்பட்டதாக குறிப்பிட்டார்.
அரவக்குறிச்சியில் திமுக சார்பாக செந்தில்பாலாஜியை ஆதரித்து அவரது தொண்டர்கள் வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களுக்கு 300 மீட்டர் அப்பால் நின்று கொண்டிருந்தனர். அவர்களை அப்புறப்படுத்த சொல்லி போலீசார் கூறியதால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. அதனை குறிப்பிட்டு பேசியிருந்தார்
DINASUVADU