சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து – உரிமையாளர் கைது..!

Default Image

சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து விவகாரத்தில் உரிமையாளர் பூமாரி கைது.

சாத்தூர் அருகே மஞ்சள் ஓடைப்பட்டியில் கடந்த 5-ஆம் தேதி ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து தொடர்பாக 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ளவர்களை தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில், விஜயகரிசல்குளத்தில் உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த பூமாரியை தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள ஆறுமுகம், நாகேந்திரன், பரமேஸ்வரனை காவல்துறை தேடி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்