#BREAKING: சாத்தான்குளம் கொலை வழக்கு.! விசாரணை ஒத்திவைப்பு.!

சாத்தான்குளம் கொலை வழக்கில் விரிவான உத்தரவு பின்னர் அறிவிக்கப்படும் என கூறி வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
தந்தை, மகன் வழக்கு தொடர்பான விசாரணையை சிபிசிஐடி போலீசார் நேற்று காலை தொடங்கியது. சிபிசிஐடி போலீசார் நேற்று காலை முதல் ஜெயராஜ் வீடு, கடை மற்றும் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையை தொடர்ந்து நேற்று இரவு போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்ட பின்னர் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் ஆகிய முக்கிய குற்றவாளிகளை சிபிசிஐடி போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில், சாட்சியம் அளித்த பெண் காவலர் ரேவதிக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது.
சாத்தான்குளம் சம்பவத்தில் நீதி நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கையை சிபிசிஐடி உருவாக்கியுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை சிபிசிஐடியின் நடவடிக்கை தந்துள்ளது என உயர்நீதிமன்ற மதுரை கிளை பாராட்டியது. இதைத்தொடர்ந்து, சாட்சியம் அளித்த பெண் காவலர் ரேவதியிடம் போனில் பேசிய நீதிபதிகள் “கவலைப்பட வேண்டாம். நாங்கள் விரிவான உத்தரவை வழங்குகின்றோம்” என கூறினர்.
பின்னர், சாத்தான்குளம் கொலை வழக்கில் விரிவான உத்தரவு பின்னர் அறிவிக்கப்படும் என கூறி வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. தடயவியல் துறையினர் சேகரித்து பொருட்களை பரிசோதனைக்கு அனுப்ப நீதிமன்றம் அனுமதி தேவையில்லை என்று தெரிவித்துள்ளது . ஒரு மனிதன் இன்னொரு மனிதனை அடிப்பது ஏன்..? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!
April 17, 2025
உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!
April 17, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025