தமிழ்நாடு காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளராக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியான சசிகாந்த் செந்தில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், சமூக ஊடகம், முன்னணி அமைப்புகள் மற்றும் துறைகள், பயிற்சி முகாம் நடத்துவது குறித்த பணிகள் சிறப்பாக அமைந்திட, அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவின் ஒப்புதலோடு, தமிழ்நாடு காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளராக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியான சசிகாந்த் செந்தில் நியமிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில், இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், காங்கிரஸ் கட்சியின் முன்னணி அமைப்புகளை ஒருங்கிணைக்கும் மகத்தான பொறுப்பினை அளித்த தலைமைக்கு எனது நன்றி என்றும் கடைக்கோடி தொண்டர்களுடன் மக்கள் நலனை முன்னிறுத்தி எங்களது பயணம் தொடரும் எனவும் கூறியுள்ளார்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…