சசிகலா வருகை அதிமுகவில் மாற்றம் ஏற்படுத்துமா ? முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்

Default Image

அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் சசிகலா  விடுதலையாவர் என்று தகவல் வெளியாகி வரும் நிலையில்,அவர் வருகை எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது  என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக  சசிகலாவிற்கு   சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.சில நாள்களுக்கு முன் கர்நாடக சிறைத்துறை நன்னடத்தை அடிப்படையில் சசிகலாவை சிறையில் இருந்து சில மாதங்களில் விடுதலை செய்ய உள்ளதாக தகவல் வெளியானது. இதனைத்தொடர்ந்து சசிகலாவை அதிமுகவில் இணைவது குறித்து பல கருத்துக்கள் வெளியாகி வருகின்றனர். அதில் அதிமுகவினர் சிலர் சசிகலாவை கட்சியில் இணைத்துக் கொள்ள மாட்டோம் எனவும், சிலர் அதை பற்றி தலைமைதான் முடிவு செய்யும் என கூறி வருகின்றனர்.

அண்மையில்  தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சசிகலா விடுதலை குறித்து சிறை நிர்வாகத்திடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த சிறை நிர்வாகம்,சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலா 2021 -ஆம் ஆண்டு ஜனவரி 27-ஆம் தேதி விடுதலையாகிறார் என்று தெரிவித்துள்ளது.

அபராதத்தொகை ரூ.10.10 கோடியை கட்டாவிடில் 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி 27-ஆம் தேதி சசிகலா விடுதலையாவார் என்று சிறை நிர்வாகம் பதில் தெரிவித்தது. ஏற்கனவே சுதாகரன், தனது அபராதத் தொகை ரூ.10 கோடியை நீதிமன்றத்தில் செலுத்தி உள்ளார். ஆகவே சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலாவிற்கு விதிக்கப்பட்ட ரூ.10.10 கோடி அபராதம்  அவரது சார்பில் நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டுள்ளது.எனவே அவர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் விடுதலையாவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கோவை விமான நிலையத்தில் முதலமைச்சர் பழனிசாமியிடம் சசிகலா விடுதலை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.இதற்கு பதில் அளித்த அவர்  ,சசிகலா விடுதலை அதிமுகவில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

 :

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்