சசிகலா அவர் மனதில் உள்ளதை சொல்லியிருக்கிறார். இதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை இதுகுறித்து ஆலோசனை மேற்கொள்வோம்.
சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து திரும்பிய சசிகலாவின் வருகை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இவர் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எல்லாருடைய எதிர்பார்ப்பிற்கும் ஏமாற்றத்தை அளிக்கும் வண்ணம், அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து, அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், எல்லாரும் ஒற்றுமையாக இருக்க வாய்ப்பு இல்லை என்பதால் சசிகலா அரசியலை விட்டு விலகி விட்டார் என்றும், அவர் ஒதுங்கி இருக்க வேண்டும் என்று முடிவு எடுத்து விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அதிமுகவிலேயே எங்களை ஒதுக்கி விட்டார்கள். இதற்கு நிர்பந்தம் காரணம் என நான் சொல்ல மாட்டேன். இந்த முடிவு சசிகலாவின் சொந்த முடிவு. சசிகாலா அதிமுக-வின் பொது செயலாளர் தான். ஆனால், அவர் அதிமுகவை மீட்க போகிறார் என்று நானும் சொல்லவில்லை. சசிகலாவும் சொல்லவில்லை. சசிகலா வெளியிட்டுள்ள இந்த அறிக்கை குறித்து இனிமேல்தான் ஆலோசனை நடத்த வேண்டும். சசிகலா அதிமுக ஒன்றாக இருக்க வேண்டும் என கருதுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், சசிகலாவின் இந்த முடிவு எனக்கு அதிர்ச்சியை அளித்தது. அவரிடம் அரசியலில் இருந்து விலக வேண்டாம் என அரைமணி நேரம் போராடினேன். ஆனால் அவரின் முடிவு எனக்கு சோர்வை அளித்தது. சசிகலா அவர் மனதில் உள்ளதை சொல்லியிருக்கிறார். இதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. இதுகுறித்து ஆலோசனை மேற்கொள்வோம் என தெரிவித்துள்ளார்.
சென்னை : நெல்லை கங்கைகொண்டானில் டாடா குழும நிறுவனத்தின் சூரிய மின்கல உற்பத்தி ஆலையை திறந்து வைப்பதற்காக இன்று முதலமைச்சர்…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட்…
சென்னை : வழக்கமாக அஜித் படங்கள் என்றாலே அவருக்கென தனி மாஸான ஓப்பனிங் பாடல் இருக்கும். மாஸ் வசனங்களுடன் அவருடைய அறிமுக…
மகாராஷ்டிரா : இந்தியா – இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல்…
அஜித் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், பலரும்…
டெல்லி : யூனிவர்சிட்டி கிராண்ட்ஸ் கமிஷன் (UGC) சமீபத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேடுதல் குழுவின் அமைப்பில் மாற்றங்களை அறிவித்திருந்தது. அறிவிக்கப்பட்ட…