சிறையில் சுடிதாருடன் சசிகலா..!வைரலாகும் புகைப்படம்..!

Default Image

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களுருவில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலா உள்ளார்.சிறையில் உள்ள சசிகலா விதிகளை மீறி சிறையில் இருந்து வெளியில் சென்றுவருவதாகவும் ,சசிகலாவுக்கு விதிகளை மீறி வசதிகள் செய்து தருவதாகவும் பல புகார்கள் எழுந்தனர்.
இது தொடர்பாக நடத்திய விசாரணையில் அனைத்தும் உண்மை என அறிக்கை வெளியிடப்பட்டது.இந்நிலையில் தற்போது ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது சிறையில் உள்ள சசிகலா சுடிதாருடன் சிறையில் இருக்கும் புகைப்படம் தான் அது.
சசிகலா
இது குறித்து சிறைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ஆயுள் தண்டனை கைதிகள் தான் விதிப்படி உடை கொடுக்கப்படும்.மேலும் ஊழல் வழக்கு , ஒரு ஆண்டு , இரண்டாண்டு கைதிகளுக்கு அவர்கள் விரும்பும் உடையை அணிந்து கொள்ளலாம் என அதிகாரிகள் கூறினர்.
சிறையில் உள்ள சசிகலாவின் புகைப்படத்தை யார்?வெளியிட்டது என சிறை அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் எந்தவிதமான பதிலும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்