அடிப்படை உறுப்பினராக கூட இல்லாத சசிகலா, எப்படி அதிமுகவை சொந்தம் கொண்டாட முடியும்….?

Published by
Rebekal

அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக கூட இல்லாத சசிகலா எப்படி அதிமுகவை சொந்தம் கொண்டாட முடியும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் கூறியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழக அரசு தவறி விட்டது எனவும், இதனால் கட்டுமான தொழிலில் ஈடுபடுபவர்கள் அவதிக்குள்ளாகி உள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து தமிழகம் முழுவதும் மின்வெட்டு பிரச்சினை அதிகரித்துள்ளதுடன், அதிமுக ஆட்சியில் மின் மிகை மாநிலமாக திகழ்ந்த தமிழகத்தில் தற்போது அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுவதாகவும் கூறியுள்ளார்.

மேலும், தடுப்பூசி இல்லை என்று அறிவிப்பு பலகைகளை வைக்கக்கூடிய ஆட்சியாக திமுக ஆட்சி செயல்படுவதாகவும், திமுக ஆட்சிக்கு வந்த பின் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நோயாளி கொலை செய்யப்பட்டிருப்பது எந்த அளவு இந்த ஆட்சியில்  பாதுகாப்பு இல்லை என்பதை காட்டுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.மேலும் கட்சியின் அடிப்படை உறுப்பினராக கூட இல்லாத சசிகலா எப்படி அதிமுகவை சொந்தம் கொண்டாட முடியும் என தெரிவித்துள்ள அவர், அதிமுகவில் வளர்ச்சியை பார்த்து பொறுத்துக்கொள்ள முடியாமல் தான் சசிகலா ஆடியோக்களை வெளியிடுவதாகவும் கூறியுள்ளார்.

மேலும், சசிகலாவின் சூழ்ச்சிகள் தோல்வி அடைந்து விட்டதாகவும், அவரது எண்ணம் நிறைவேறாது எனவும், அதிமுகவின் தேர்தலைப் பொருத்தவரை அதிமுகவுக்கு வெற்றிகரமான தோல்வி தான் கிடைத்துள்ளதாகவும், 3 சதவீத வாக்கு வித்தியாசத்தில்தான் திமுக வெற்றி பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இபிஎஸ் ஓபிஎஸ் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

4 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

12 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 day ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago