அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக கூட இல்லாத சசிகலா எப்படி அதிமுகவை சொந்தம் கொண்டாட முடியும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் கூறியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழக அரசு தவறி விட்டது எனவும், இதனால் கட்டுமான தொழிலில் ஈடுபடுபவர்கள் அவதிக்குள்ளாகி உள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து தமிழகம் முழுவதும் மின்வெட்டு பிரச்சினை அதிகரித்துள்ளதுடன், அதிமுக ஆட்சியில் மின் மிகை மாநிலமாக திகழ்ந்த தமிழகத்தில் தற்போது அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுவதாகவும் கூறியுள்ளார்.
மேலும், தடுப்பூசி இல்லை என்று அறிவிப்பு பலகைகளை வைக்கக்கூடிய ஆட்சியாக திமுக ஆட்சி செயல்படுவதாகவும், திமுக ஆட்சிக்கு வந்த பின் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நோயாளி கொலை செய்யப்பட்டிருப்பது எந்த அளவு இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லை என்பதை காட்டுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.மேலும் கட்சியின் அடிப்படை உறுப்பினராக கூட இல்லாத சசிகலா எப்படி அதிமுகவை சொந்தம் கொண்டாட முடியும் என தெரிவித்துள்ள அவர், அதிமுகவில் வளர்ச்சியை பார்த்து பொறுத்துக்கொள்ள முடியாமல் தான் சசிகலா ஆடியோக்களை வெளியிடுவதாகவும் கூறியுள்ளார்.
மேலும், சசிகலாவின் சூழ்ச்சிகள் தோல்வி அடைந்து விட்டதாகவும், அவரது எண்ணம் நிறைவேறாது எனவும், அதிமுகவின் தேர்தலைப் பொருத்தவரை அதிமுகவுக்கு வெற்றிகரமான தோல்வி தான் கிடைத்துள்ளதாகவும், 3 சதவீத வாக்கு வித்தியாசத்தில்தான் திமுக வெற்றி பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இபிஎஸ் ஓபிஎஸ் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.…
ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…
கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…