சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட சசிகலா..!

Default Image

சசிகலா அவர்கள் சென்னை கோட்டூர்புரத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து, மக்களுக்கு ஆறுதல் கூறினார். அதனை தொடர்ந்து, மக்களுக்கு நிவாரண பொருட்களையும் வழங்கியுள்ளார். 

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில், பல மாவட்டங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கிய நிலையில், சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளித்தது. மேலும், வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால், மக்களின் இயல்புவாழ்க்கை பெரும் பாதிப்புக்கு உள்ளானது.

குறிப்பாக சென்னையில் மழையால் அதிகமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்து, நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், சசிகலா அவர்கள் சென்னை கோட்டூர்புரத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து, மக்களுக்கு ஆறுதல் கூறினார். அதனை தொடர்ந்து, மக்களுக்கு நிவாரண பொருட்களையும் வழங்கியுள்ளார். மேலும், தமிழகத்தில் தத்தளிக்கும் மக்களை காப்பாற்ற மத்திய அரசு நிதி கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live tn
axar patel Ruturaj Gaikwad
myanmar earthquake
rishabh pant sanjiv goenka
mk stalin assembly
rishabh pant lsg
delhi parliament assembly