ஓபிஎஸ் தலைமை ஏற்றால் சசிகலா, டிடிவி தினகரன் அதிமுகவில் இணைவார்கள் – தனியரசு

Default Image

அதிமுகவின் தோழமை என்பதால் ஓ. பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளேன் என உ. தனியரசு பேட்டி.

அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்த சர்ச்சை வெடித்துள்ள நிலையில், அதிமுக தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்கவில்லை என தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ. தனியரசு தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், 40 மாவட்ட செயலாளர்களில் ஒரு சில நிர்வாகிகளை தவிர வேறு யாரும் எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்கவில்லை. திட்டமிட்ட சூழ்ச்சியை, வஞ்சகத்தை நடத்தி முடித்திருப்தாக குற்றசாட்டினார்.

ஓ.பன்னீர்செல்வத்தின் அதிகாரத்தை பறிப்பதற்கே ஒற்றை தலைமை என்று கூறி சதி செய்வதாகவும் குறிப்பிட்டார். இதனால், இந்த முறை ஓபிஎஸ் விட்டுத்தர போவதில்லை. அதில் அவர் உறுதியாக இருக்கிறார். ஓபிஎஸ் தான் ஒற்றைத் தலைமையை ஏற்க வேண்டும். ஓபிஎஸ் தலைமை ஏற்றால் சசிகலா, டிடிவி தினகரன் அதிமுகவில் இணைவார்கள் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், அதிமுகவின் தோழமை என்பதால் ஓ. பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளேன் என்றும் மாவட்ட செயலாளர்கள் மட்டுமே இபிஎஸ்-க்கு ஆதரவு, தொண்டர்கள் அனைவரும் ஓபிஎஸ் பக்கம் உள்ளனர் எனவும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்