அதிமுகவுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை என யாராலும் சொல்ல முடியாது.!- சசிகலா பேட்டி.!

Default Image

அதிமுகவுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை என யாராலும் சொல்ல முடியாது என எம்ஜிஆர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு சசிகலா பேட்டியளித்தார். 

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 35வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதன் காரணமாக பலரும் தங்கள் இரங்கலை எம்ஜிஆர் நினைவிடத்தில் செலுத்தி வருகின்றனர்.

எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் வி.கே.சசிகலா தனது ஆதரவாளர்களுடன் அஞ்சலி செலுத்தினார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுகவுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை என யாராலும் சொல்ல முடியாது என குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறுகையில், அதிமுக யாருக்கு சொந்தம் என தொண்டர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். அதிமுக தொண்டர்களின் முடிவு அடிப்படையில் தான் இனி எல்லாமே நடக்கும் எனவும் சசிகலா செய்தியாளர்களிடம் பேசினார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்