சின்னம்மா அவர்கள் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்குச் சான்றுதான் ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுகள்!

Default Image

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி. தினகரன் வெற்றிபெற்றதையடுத்து பல்வேறு தரப்புகளிலிருந்தும் பல்வேறு விதமான கருத்துக்கள் பரவலாகி வருகின்றன.

டிடிவி தினகரன் அதிமுக வேட்பாளர் மதுசூதனனைக் காட்டிலும் 40,707 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

இதனையடுத்து அரசியல் களம் சொல்லாடல் களமாக மாறிவிட்டது.

இந்நிலையில் இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா தன் முகநூல் பக்கத்தில்,

“சின்னம்மா அவர்கள் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்குச் சான்றுதான் ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுகள்” என்று பதிவிட்டுள்ளார்.

ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை வெளியிட்டதற்காக தினகரன் மீது மறைமுக விமர்சனம் வைத்தவர் கிருஷ்ணப்பிரியா.

தற்போது ஆர்.கே.நகர் வெற்றிக்கு சசிகலா மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையே காரணம் என்று பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

source: dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்