பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்து சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நரிக்குறவர், குருவிக்காரர் சமுதாயத்தினரை, பழங்குடியினர் பட்டியலில் சேர்த்ததற்கு ஒன்றிய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்து சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர், தமிழகத்தில் உள்ள நரிக்குறவர், குருவிக்காரர் இன மக்களின் வாழ்வு வளம் பெறும் வகையில் எண்ணற்ற நலத் திட்டங்களை கொடுத்துள்ளார்கள். மேலும் இந்த சமுதாயத்தினரை, பழங்குடியினர் வகுப்பில் சேர்க்கவேண்டும் என நம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கண்ட கனவு தற்போது நிறைவேறியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், நரிக்குறவர், குருவிக்காரர் சமுதாயத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்துள்ளதற்கு நம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தான் முழு முதற் காரணம் என்ற உண்மையை மறைத்து, திமுகவினர் தங்களது சாதனையாக மார்தட்டி கொள்வது வேடிக்கையாக இருக்கிறது.
எனவே, நம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தலைமையிலான கழக அரசு தொடர்ந்து மேற்கொண்ட நடவடிக்கைகளின் பயனாக, தற்போது நரிக்குறவர், குருவிக்காரர் சமுதாயத்தினரை, பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதற்கு நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.
நமது கோரிக்கைகள் தற்போது நிறைவேறியிருப்பதற்கு தமிழக மக்களின் சார்பாகவும், அனைத்தித்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாகவும், மத்திய அரசுக்கும், மாண்புமிகு இந்திய பிரதமர் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…