பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்ட சசிகலா…!

Default Image

பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்து சசிகலா அறிக்கை  வெளியிட்டுள்ளார்.

நரிக்குறவர், குருவிக்காரர் சமுதாயத்தினரை, பழங்குடியினர் பட்டியலில் சேர்த்ததற்கு ஒன்றிய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்து சசிகலா அறிக்கை  வெளியிட்டுள்ளார்.

புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர், தமிழகத்தில் உள்ள நரிக்குறவர், குருவிக்காரர் இன மக்களின் வாழ்வு வளம் பெறும் வகையில் எண்ணற்ற நலத் திட்டங்களை கொடுத்துள்ளார்கள். மேலும் இந்த சமுதாயத்தினரை, பழங்குடியினர் வகுப்பில் சேர்க்கவேண்டும் என நம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கண்ட கனவு தற்போது நிறைவேறியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், நரிக்குறவர், குருவிக்காரர் சமுதாயத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்துள்ளதற்கு நம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தான் முழு முதற் காரணம் என்ற உண்மையை மறைத்து, திமுகவினர் தங்களது சாதனையாக மார்தட்டி கொள்வது வேடிக்கையாக இருக்கிறது.

எனவே, நம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தலைமையிலான கழக அரசு தொடர்ந்து மேற்கொண்ட நடவடிக்கைகளின் பயனாக, தற்போது நரிக்குறவர், குருவிக்காரர் சமுதாயத்தினரை, பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதற்கு நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.

நமது கோரிக்கைகள் தற்போது நிறைவேறியிருப்பதற்கு தமிழக மக்களின் சார்பாகவும், அனைத்தித்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாகவும், மத்திய அரசுக்கும், மாண்புமிகு இந்திய பிரதமர் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்