22 ஏக்கரில் அமைந்துள்ள சசிகலா தொடர்புடைய பங்களா சொத்து முடக்கம்…!

Default Image

சென்னையை அடுத்த பையனூரில், 22 ஏக்கரில் அமைந்துள்ள சசிகலாவுக்கு தொடர்புடைய பங்களா சொத்துக்களை வருமானவரித்துறை அதிகாரிகள்  முடக்கியுள்ளனர்.

சென்னையை அடுத்த பையனூரில், 22 ஏக்கரில் அமைந்துள்ள சசிகலாவுக்கு தொடர்புடைய பங்களா சொத்துக்களை வருமானவரித்துறை அதிகாரிகள்  முடக்கியுள்ளனர். 2017-ஆம் ஆண்டு வருமானவரித்துறை சோதனை நடந்த நிலையில், பினாமி சட்டத்தின் கீழ் இந்த சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. சொத்துக்களை முடக்கியுள்ள அதிகாரிகள், அங்கு நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.

கடந்த 2019-ல் பினாமி சட்டத்தின்கீழ் சசிகலா தொடர்புடைய ரூ.1,600 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டது. அதேபோல், 2020-ஆம் ஆண்டு, கோடநாடு தேயிலை எஸ்டேட், சிறுதாவூர் உட்பட 65 சொத்துக்கள் முடக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்