அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா பாஜகவில் இணைந்தார்

Default Image

 மாநிலங்களவை உறுப்பினராக உள்ள சசிகலா புஷ்பா,டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற  நிகழ்ச்சியில்மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா,தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் முரளிதர ராவ்,முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்,முன்னிலையில் தன்னை  பாஜகவில் இணைத்துக்கொண்டார்.  

கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரை தூத்துக்குடி மேயராக பதவி வகித்தவர் சசிகலா புஷ்பா.தற்போது மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.இதற்கு இடையில் அதிமுகவில் இருந்து சசிகலா நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் இன்று டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற  நிகழ்ச்சியில்மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா,தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் முரளிதர ராவ்,முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்,முன்னிலையில் தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார்.

இதன் பின்னர் அவர் பேசுகையில், பாஜகவில் இணைந்த பின்னர் மேடையில் பேசிய அவர், பாஜகவின் தன்னை இணைத்ததற்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.தமிழகத்தில் 2021-ஆம் ஆண்டு பாஜக ஆட்சி அமைப்பதை யாராலும் தடுக்க முடியாது என்று சசிகலா புஷ்பா பேசினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்