பெங்களூரில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
உடல்நலக்குறைவால் பெங்களூரில் உள்ள விக்டோரியா மருத்துவ கல்லுரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு கொரோனா மற்றும் நிமோனியா காய்ச்சல் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. 98-ஆக இருந்த ஆக்சிஜன் அளவு 95-ஆக குறைந்து இருப்பதாக கூறப்பட்டது.
மேலும், சசிகலாவுக்கு ரத்த அழுத்தம், நீரிழவு, தைராய்டு போன்ற பிரச்னைகளும் இருப்பதால், தீவிர கண்காணிப்பில் உள்ளார் என்றும் தெரிவித்தனர். இந்நிலையில் தற்போது சசிகலா உடல்நிலை குறித்து விக்டோரியா மருத்துவ கல்லுரி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், சசிகலா உடல்நிலையில் சீராக நல்ல முன்னேற்றம் உள்ளது என்றும் சுய நினைவுடன் நன்றாக இருக்கிறார் எனவும் தெரிவித்துள்ளது. ஆக்சிஜன் அளவு காலையில் இருந்ததைவிட தற்போது 98-ஆக அதிகரித்துள்ளது என அறிக்கையில் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தவெக இரண்டாம் ஆண்டு தொடக்கவிழா நாளை புதன்கிழமை 26 பிப்ரவரி மகாபலிபுரம் 5 நடசத்திர விடுதி உள்…
டெல்லி : நடந்து முடிந்த டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் 48 இடங்களை கைப்பற்றி 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக ஆட்சியை…
சென்னை : சென்னை கோபாலபுரம் மாநகராட்சி விளையாட்டு திடலில் அமைக்கப்பட்டுள்ள குத்துச்சண்டை அகாடமியை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின். இளைஞர்…
துபாய் : இந்த வருட சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தி வருகிறது. ஆனால், துரதிஷ்டவசமாக பாகிஸ்தான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று எலான் மஸ்கின் தீவிர…
சென்னை : தமிழகத்தில் சமீபகாலமாக பல்வேறு இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சி…